25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அருள்மிகு ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோவில் நவராத்ரி உற்சவம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அருள்மிகு ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோவில் நவராத்ரி உற்சவம்

இராஜபாளையம், அருள்மிகு ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோவில் நவராத்ரி உற்சவம் 

ஸ்ரீ சாரதா சரண் நவராத்ரி உற்சவம் 

நமது நூதன திருக்கோவிலில் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகள், ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்வாமிகள் ஆகியோர்களின் பரிபூர்ண அனுக்ரஹத்துடன் 14.10.2023 சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு மேல் ஸ்ரீ சாரதாம்பாள் மஹா அபிஷேகம். ஜெகத்ப்ரஸுதிகா அலங்காரம் 15.10.2023 ஞாயிற்றுக்கிழமை முதல் 24.10.2023 செவ்வாய்க்கிழமை வரை ஸ்ரீ சாரதா சரண் நவராத்ரி உற்சவம் கீழ்க்கண்டவாறு தினசரி நடைபெற உள்ளன.

காலை 6.00 - 9.00 மணி -   நித்ய பூஜைகள் (ஸ்ரீராஜகணபதி ஸ்ரீ நவாவரண,ஸ்ரீ ஆதிசங்கரபகவத்பாதாசாரியர் பூஜைகள்)

காலை 9.00 - 12.00 மணி - ஸ்ரீ தேவீமஹாத்ம்ய பாராயணம்

மாலை 5.00-7.00 மணி  -  நித்ய பூஜைகள் (அஷ்டோத்ர, த்ரிசதீ, ஸஹஸ்ரநாம பாராயணங்கள்)

இரவு 7.45 மணி -  ரதோற்சவம்

23.10.2023 திங்கள்கிழமை காலை திருக்கோவிலில் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள யாகசாலையில் மஹாகணபதி ஹோமமும் மஹாசண்டி ஹோமமும் சுமங்கலி, கன்யா பூஜைகளும் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

ஸ்ரீ சாரதா சரண் நவராத்ரி ஒருநாள் பூஜைக்கு ரூ.3000/- நவராத்ரி பூஜைக்கு கட்டளைதாரராக விரும்பும் ஆஸ்தீக மஹாஜனங்கள் திருக்கோவில் அர்ச்சகர் மற்றும் ஊழியர்களை தொடர்பு கொள்ளவும்.

24.10.2023 செவ்வாய்க்கிழமையன்று விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன் அக்ஷராப்யாசமும் நடைபெற உள்ளன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News