25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வலிகளைகுணமாக்கும் சிறந்தமூலிகை நொச்சி இலை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வலிகளைகுணமாக்கும் சிறந்தமூலிகை நொச்சி இலை

நீர்வளம் உள்ள இடங்களில் தானே வளரும் இயல்புடையது நொச்சி. இதன் இலை, பூ, வேர், பட்டை ஆகியவை கருப்பு நிறமாய் அமைந்த கருநொச்சி எல்லா இடங்களிலும் அரிதாக காணப்படுகின்றது. இலை வேதனை தணித்தல், சிறுநீர்ப் பெருக்குதல், நோய் நீக்கி உடல் நலம் மிகுத்தல், மாதவிலக்கைத் தூண்டுதல், நுண்புழுக்கொள்ளுதல் ஆகிய பண்புகளை உடையது. பட்டை சுரந் தணிந்து உடலை வலுவாக்கும்.நொச்சி இலை சாற்றுடன் மிளகுத்தூளும் சிறிது நெய்யும் கலந்து காலை, மாலைபத்தியத்துடன் சாப்பிட்டு வர மூட்டு வலி, இடுப்பு வலி, வாத வீக்கம் ஆகியவை தீரும். நொச்சிவேர் பட்டையை உலர்த்தி பொடித்து அதை தேனில் குழைத்து கொடுத்து வர வாத பிடிப்பு, நரம்புவலி, வயிற்று வலி, நீர்க் கோவை ஆகியவை தீரும். நொச்சிஇலையுடன் பாதியளவு மிளகு சேர்த்தரைத்து சுண்டைக்காய் அளவு காலை மாலை கொடுத்து வர குளிர் சுரம், செரியாமைஉடம்பு வலி, கை கால் பிடிப்பு ஆகியவை தீரும். 

நொச்சி, வேம்பு, தழுதாழை, ஆடாதொடை, தும்பை, நாயுருவி, குப்பைமேனி, வேலிப்பருத்தி இவைகளை ஒரு கைப்பிடி எடுத்து முக்கால் அளவு நீர் உள்ள வாய் அகன்ற மண்கலத்தில் இட்டு கொதிக்க வைத்துஆவி  பிடிக்க, வாத நோய்கள் தணியும். வாரம்இரு முறை பயன்படுத்தலாம். நொச்சி இலையை நீரிலிட்டு காய்ச்சி வாத வீக்கம் உள்ள இடங்களில் வேது பிடிக்க குணமாகும். இலையைவதக்கி துணியில் கட்டிக்கொண்டு ஒத்தடம் கொடுக்க கீழ்வாதம், வாதவீக்கம் ஆகியவை குணமாகும். நொச்சியிலையை இடித்து பிழிந்து வடிகட்டிய சாற்றுடன் சமன் அளவு கோமியம் கலந்து பருகி வர கல்லீரல், மண்ணீரல்வீக்கம் குணமாகும். 

இலையை தலையணையாக பயன்படுத்தி வர மண்டை இடி, கழுத்து வீக்கம்,பிடரிவீக்கம், சன்னி, இழுப்பு, மீக்கடைப்பு ஆகியவை தீரும். நொச்சிப்பூவை உலர்த்தி பொடித்து கற்கண்டு கலந்து காலை,மாலைதேனில் கொடுத்து வர ,ரத்த வாந்தி, இரத்தபேதிஆகியவை தீரும். நொச்சிஇலை, மிளகு, கிராம்பு, பூண்டு பல் ஆகியவற்றை வாயிலிட்டு மென்று சுவைத்து சாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கினால் ஆஸ்துமாவினால் ஏற்படும் மூச்சுத்திணறல் தீரும். இம்முறையைநீடித்துப் பயன்படுத்த நோய் முற்றிலும் அகலும். நொச்சிஇலையை மென்மையாய் அரைத்து பற்று போட கட்டிகள் வீக்கங்கள் தீரும்.நொச்சி வேரை இடித்து நீரிலிட்டு பாதியாக சுண்ட காய்ச்சிக் குடித்து வர, சிறுநீர்ப்பை அலர்ஜி தீர்ந்து, சொட்டுமூத்திரம், நீர்க் கடுப்பு, வயிற்று மழப் புழுக்கள் ஆகியவை தீரும்.இந்த மருத்துவ குறிப்புகளை பயன்படுத்தும் பொழுது இதற்கான வைத்தியருடன் ஆலோசனை கேட்டால், அளவு முறையிலிருந்து அனைத்தையும் பக்குவமாக எடுத்துரைப்பார்கள் .அதன்படி பயன்படுத்தினால் நிவாரணம் கிடைக்கும் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News