25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள். >>


ராஜபாளையம் மட்டுமின்றி சுற்றியுள்ள  நகரங்கள் ,கிராமங்களில் நேற்றிரவு 9 :08 மணிக்கு 3 ரிக்டர் அளவுக்கு லேசான நிலநடுக்கம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் மட்டுமின்றி சுற்றியுள்ள  நகரங்கள் ,கிராமங்களில் நேற்றிரவு 9 :08 மணிக்கு 3 ரிக்டர் அளவுக்கு லேசான நிலநடுக்கம் .

.ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர்,  சிவகாசி நகரங்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களில் நேற்றிரவு 9 :08 மணிக்கு 3 ரிக்டர் அளவுக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரு சில பகு திகளில் பலத்த வெடிசப்தம் கேட்டதாக மக்கள் தெரிவித்தனர்.

நேற்றிரவு 9:08 மணிக்கு ஒரு நிமிடத்துக்கு ஒரு சில இடங்களில்,ஸ்ரீவில்லிபுத்தூர்,  கிருஷ்ணன் கோவில், குலாலர் தெரு,தன்யா நகர், அசோக் நகர், வன்னியம்பட்டி, செண்பகத்தோப்பு, நாச்சியார்பட்டி, கிருஷ் ணன் கோவில், செங்குளம், பாட்டக்குளம் உள்ளிட்ட ஏராளமான  கிராமங்களில் ,லேசானஅதிர்வுகளும்,மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிராமங்களில் பலத்த வெடி சத்தத்துடனும் நில நடுக்கம் ஏற்பட்டது.

பொது மக்கள் அச்சத்துடன்வீட்டிற்குள் இருந்து தெருக்களுக்கு வந்தனர். பல வீடுகளில் சுவரில் மாட்டி இருந்த போட்டோக்கள் கடிகாரங்கள் ஆடின. சில வீடுகளில் வாஷிங் மெஷின், பிரிட்ஜ் நகன்றதாக மக்கள் தெரிவித்தனர். 

சில மணித்துளிகள் வரை உணர்ந்த சத்தம் சிலருக்கு பூமிக்கு அடியில் பலத்த வெடிகுண்டு வெடித்தது போலவும், ஒரு சிலருக்கு கனரக வாகனம் செல்வது போலும், கேட்டதாக தெரிவித்தனர்.

சிவகாசி அருகேபாறைப்பட்டி,துரைச்சாமிபுரம்,குவாரிபகுதியிலிருந்து,நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும்,தரைமட்டத்திலிருந்து 10 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் உறுதி செய்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News