ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம்2022 டிச. மாதம் மதுரை ரயில்வே கோட்டத்தில் ரூ.11.70 கோடிக்கு பணிகள்துவங்கியது.2வது நுழைவு பாதை, முதல் வகுப்பு காத்திருப்பு அறை, கண்காணிப்பு கேமராக்கள், புதிய வாகன காப்பகம், லிப்ட் வசதியுடன் கூடிய2வது நடை மேம்பாலம், எல்.இ.டி., அறிவிப்பு பலகைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுக்கான பணிகள் நடந்து வருகிறது.எல்.இ.டி., அறிவிப்புத்திரை, லிப்ட், சுற்றுச்சுவர், கூடுதல் கட்டடங்கள் பணிகள் முழுமை பெற்று வரும் நிலையில் தென்னக ரயில்வே துணை தலைமை பொறியாளர் கார்த்திக் தலைமையிலான அதிகாரிகள் பார்வையிட்டனர். என்.எஸ்.ஜி.,4 என்ற தரவரிசைக்கு வருவாய் அடிப்படையில் முன்னேறி உள்ளதாக தெரிவித்ததுடன் அதிகாரிகள் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளனர்.
0
Leave a Reply