சதுர்த்தி விழாவை முன்னிட்டு ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் ,விநாயகர் சிலைகள் பந்தலுக்கு கொண்டுவரப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி விழா விற்காக மாயூரநாதசுவாமி கோயில் முன்பு ராஜபாளையம் தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் சிலைகள் தயாரிப்பு பணி கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. ராஜபாளையம் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் முன்பு உள்ள அலங்கார பந்தலில் நேற்று மாலை 5.30 மணிக்கு மங்கள கணபதி, விஜய கணபதி, மேல் பொருள் அருளும் கணபதி, நர்த்தன கணபதி , ஆனந்த கணபதி, சயன கணபதி ஆகிய விநாயகர் சிலைகள் மக்கள் பார்வைக்காக டிராக்டர்கள் மூலம் கொண்டு வரப்பட்டது.
0
Leave a Reply