பப்பாளி ஃபேஸ் பேக்
பப்பாளிப் பழ பேக்கை முகத்தில் அடிக்கடிபோட்டுக் கொண்டால், முகம் நல்ல நிறமாக இருக்கும். இதற்கு காரணம், முகத்தின் மேற் பகுதியில் அதிக அளவு மெலனின் சேர்வதை, பப்பாளி தடுத்து விடுகிறது.
சோற்றுக்கற்றாழை இலை ஜெல்லுடன் பப்பாளி கூழை கலந்து கொள்ளவும், இதை கழுத்து மற்றும் முகத்தில் பூசி நன்றாக தேய்க்கவும், பின்காய்ந்ததும் தண்ணீரில் கழுவும்.
பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து வாரம் இரண்டு முறை தடவி வர முகப்பரு,கரும்புள்ளி ஆகியவை மறையும்.
பப்பாளி மற்றும் ஆரஞ்சு இரண்டையும் கலந்து பயன்படுத்துவதால் அதிகபடியான எண்ணெய் சுரப்பது குறைந்துவிடும். மேலும் முகத்தில் உள்ள கருமையை போக்க வல்லது.
எண்ணெய்ப் பசை அதிகமுள்ள சருமம் உள்ளவர்கள் கோதுமை மாவில் நீரை விட்டு குழைந்து முகத்தில் பூசி கழுவிவர எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவு பெறும்.
0
Leave a Reply