25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


பள்ளி /கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக 14.10.2025 மற்றும் 15.10.2025 ஆகிய இரு நாட்களில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள்  நடைபெற உள்ளது .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பள்ளி /கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக 14.10.2025 மற்றும் 15.10.2025 ஆகிய இரு நாட்களில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது .

பள்ளி / கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் தமிழ் வளர்ச்சித்துறை மூலம்  ஆண்டுதோறும் மாவட்ட வாரியாக  கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள்  நடத்தப்பெற்று வருகின்றன.2025-26 ஆம் ஆண்டுக்கான பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் 14.10.2025  அன்றும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் 15.10.2025  அன்றும் விருதுநகர்  ஹாஜி பி.செய்யது முகமது  மேல்நிலைப்பள்ளியிலும் நடத்தப்பெற உள்ளன.பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளில் அனைத்து அரசு/ தனியார் / அரசு உதவி பெறும்/ பதின்ம மேல்நிலைப் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டும் பங்கேற்கலாம்.கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் அனைத்து  அரசு/ தனியார் / அரசு உதவி பெறும்  கலைக் கல்லூரிகள் / பொறியியல்/  மருத்துவக் கல்லூரிகள்/ பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள்  பங்கேற்கலாம்.

ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் ஒரு   பள்ளி / கல்லூரியிலிருந்து மொத்தம் 3 மாணவர்கள் பங்கேற்கலாம். பள்ளி மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களைத் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியர்  ஒப்பத்துடனும், கல்லூரி மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களைத் தாங்கள் பயிலும் கல்லூரியின் முதல்வர் ஒப்பத்துடன் விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரிலோ,  அஞ்சல்  முலமாகவோ,  மின்னஞ்சல் – (tamilvalar.vnr@tn.gov.in)   முலமாகவோ  13.10.2025  ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
போட்டிக்கான தலைப்புகள் முன்னதாக அறிவிக்கப்படமாட்டாது. போட்டி தொடங்கப்படும் நேரத்திற்குச் சற்று முன்னர் தான் தலைப்பு தெரிவிக்கப்படும்.

போட்டிகளின்  முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  விருதுநகர் மாவட்ட ஆட்சியர்  பரிசுகள் வழங்கவுள்ளார். பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10000/-மும் ,  இரண்டாம்பரிசு ரூ.7000/- மும்,  மூன்றாம் பரிசு ரூ.5000/ம்-  என்ற வீதத்தில் பரிசுத்தொகைகள்  வழங்கப்பட உள்ளன.   மாவட்ட அளவிலான போட்டிகளில்  முதல் பரிசு பெறும் மாணவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளப் பரிந்துரை செய்யப்பெறுவர்கள்.

மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்பு தொடர் வண்டிக் கட்டணம் பயணப்படியாக வழங்கப்பெறும். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.15,000/-மும், இரண்டாம் பரிசாகரூ.12,000/- மும், மூன்றாம் பரிசாக ரூ.10,000/- வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News