25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


ஜனாதிபதி திரவுபதி முர்மு 'கேல் ரத்னா' விருது வழங்கினார். தமிழகத்தை சேர்ந்த ஐந்து பேர் விருது பெற்றனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜனாதிபதி திரவுபதி முர்மு 'கேல் ரத்னா' விருது வழங்கினார். தமிழகத்தை சேர்ந்த ஐந்து பேர் விருது பெற்றனர்.

 2024ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, நேற்று ஜனாதிபதி மாளிகையில், சர்வதேச விளையாட்டு அரங்கில் சாதித்த,இந்திய நட்சத்திரங்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் விருது வழங்கப்படுகிறது. 

இளம் உலக செஸ் சாம்பியன் என சாதனை படைத்த தமிழகத்தின் குகேஷ் 18, பாரிஸ் ஒலிம் பிக் ஹாக்கியில் இந்திய அணிக்கு வெண்கலம் பெற்றுத்தந்த கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரிஸ் பாராலிம்பிக், உயரம் தாண் டுதலில் தங்கம் வென்ற பிர வீன் குமார், சுதந்திர இந்தியாவில் ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்ற துப்பாக்கிசுடுதல் வீராங்கனை மனுபாக ருக்கு 22, ஜனாதிபதி திரவு பதி முர்மு, 'கேல் ரத்னா' விருது வழங்கினார்.  விளையாட்டின் உயரிய மேஜர் தயான் சந்த் 'கேல் ரத்னா விருது, இம்முறை நான்கு நட்சத்திரங்களுக்கு வழங்கப்பட்டது.

இந்திய ஹாக்கி ஜாம்பவான், மேஜர் தயான்சந்த் பெயரில், விளையாட்டின் உயரிய 'கேல் ரத்னா' விருது வழங்கப்படுகிறது. சர்வதேச போட்டி களில் சாதித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நான்கு ஆண்டு செயல்பாடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஒலிம்பிக், பாராலிம்பிக், உலக சாம்பியன் ஷிப், ஆசிய விளையாட்டு, உலக கோப்பையில் வென்ற பதக்கம் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும். தகுதியானவர்களை, விருதுக் குழுவினர் தேர்வு செய்வர். பாராட்டு சான்றிதழ், பதக்கம், ரூ. 25 லட்சம் பரிசு வழங்கப்படும்.கடந்த நான்கு ஆண்டுகளில் தங்களது விளையாட்டில் சிறப்பாக செயல்பட்ட நட்சத்திரங்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது. இதற்கு பாராட்டு சான்றிதழ், அர்ஜுனா சிலை, ரூ. 15 லட்சம் வழங்கப்படும்.  

தமிழகத்தை சேர்ந்த ஐந்து பேர் விருது பெற்றனர். குகேஷிற்கு கேல் ரத்னா', பாரா பாட்மின்டன் வீராங்கனைகள் துளசிமதி, மணிஷா, நித்ய ஸ்ரீ, ஸ்குவாஷ் வீரர் அபே சிங், 'அர்ஜுனா' விருது பெற்றனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News