25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


.'ப்ரைனொசோமா”  ( கொம்பு பல்லி )
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

.'ப்ரைனொசோமா” ( கொம்பு பல்லி )

 ஊர்வனவகைஅமெரிக்காவில்வாழும்தனித்துவமுள்ளவிலங்கினம்கொம்புபல்லி.ஆங்கிலத்தில்இதன்அறிவியல்பெயர்.'ப்ரைனொசோமாஎன்பதாகும்.வட அமெரிக்காவில் மெக்சிகோ, கனடா பாலைவன புல்வெளி பகுதிகளில்அதிகம் காணப்படுகிறது. இதன் தற்காப்பு நடைமுறைகள் மிகவும் உடல் அமைப்பு, நடத்தை  வித்தியாசமானது.

இதன் தலை மற்றும் உடல் பகுதியில் கொம்பு போன்ற முட்கள் நிறைந்து உள்ளன. இதன் உதவியால் பாறை மற்றும் மண்ணுடன் ஒன்றி மறைந்து வாழ்கிறது. எதிரியின் பார்வையில் இருந்து தப்புகிறது.இதன் உடல், பரந்து, தட்டையாக இருக்கும்; சூழலுக்கு ஏற்ப உடல் நிறத்தை மாற்றும் திறன் உடையது. முதன்மை உணவாக எறும்புகளையும், பூச்சிகளையும் உண்ணும்.

இதன் கண்களுக்கு அருகில் நுண்ணிய ரத்த நாளங்கள் உள்ளன. இதை பயன்படுத்தி எதிரி மீது ரத்தத்தைப் பீய்ச்சி அடிக்கும். அந்த ரத்தம் கசப்பு சுவையுடன் இருக்கும். இதை கண்டு பூனை, நாய் போன்ற இதன் எதிரி விலங்குகள் திகைத்து ஓடிவிடும். உயிர் வாழ்வதற்கான பாதுகாப்பு நடைமுறையாக இதை பின்பற்றுகிறது கொம்பு பல்லி.

முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் உயிரினம் இது. பாலைவனத்தில் தட்ப வெப்ப மாற்றங்களுக்கு ஏற்ப, உடல் வெப்பத்தை அமைத்து கொள்ளும். குளிர்காலத்தில் உறக்க நிலைக்கு சென்று விடும். சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து அதற்கு ஏற்ப வாழ்வை அமைத்து கொள்ளும்.காடு அழிப்பு மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பட்டால் கொம்பு பல்லி இனம் உலகில் குறைந்து வருகிறது. இந்த விலங்கினத்தை பாதுகாப்பது நம் கடமை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News