25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள். >>


நெடுஞ்சாலை துறை சார்பில் சங்கரன் கோவில் முக்கு முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரையி லான 1.4 கி.மீ., துாரத்தை 7 மீட்டரில் இருந்து 10 மீட்டராக விரிவாக்கம் செய்ய ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நெடுஞ்சாலை துறை சார்பில் சங்கரன் கோவில் முக்கு முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரையி லான 1.4 கி.மீ., துாரத்தை 7 மீட்டரில் இருந்து 10 மீட்டராக விரிவாக்கம் செய்ய ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு.

ராஜபாளையம் சங்கரன்கோவில்  முக்கு முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரையிலான சாலை விரிவாக்க பணிக்கு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் சாலையோர மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து சப்கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சங்கரன்கோவில் முக்கு முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரை ரோட்டில் அடிக்கடி விபத்து உயிர் பலி ராஜபாளையம் திருநெல்வேலி மாநில நெடுஞ்சாலையில் ஏற்பட்டு வருகிறது. இதில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய்  உடைப்பு, பாதாள சாக்கடை குழாய் களில் ஏற்படும் கசிவு போன்றவைகளால் சாலை சேதம் ஆகி காணப்படுகிறது.

சங்கரன் கோவில் முக்கு முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரையிலான 1.4 கி.மீ., துாரத்தை 7 மீட்டரில் இருந்து 10 மீட்டராக புதிதாக சாலைப் பணிகளை மேற்கொள்வதுடன் சாலையை விரிவாக்கம் செய்ய பரிந்துரையின் பேரில் நெடுஞ்சாலை துறை சார்பில் விரிவாக்கம் செய்ய ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News