சாந்தா பிறந்த தினம்
, சென்னை அடையாறில் குடிசையில் 12 படுக்கைகளுடன் துவக்கப்பட்ட மருத்துவமனையை, சர்வதேச புகழ் பெற்ற மருத்துவமனை ஆக்கியதில், சாந்தாவின் பணி மகத்தானது. புற்று நோயாளிகள் கவனிப்பு, ஆய்வு தடுப்பு கட்டுப்பாடு என 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுழன்றார். உலக சுகாதார அமைப்பின், சுகாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். அவரின் சேவைக்காக மகசேசே பத்மஸ்ரீ, பத்ம விபூசன் உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்றுள்ளார். 2021 ஜனவரி 19-ல் 94வது வயதில் காலமானார். இவர் மருத்துவத்தில் 1949-ல் எம்.பி.பி.எஸ். 1952-ல் டி.ஜி.ஒ, 1954-ல் மகளிர் இந்திய சங்க புற்றுநோய் நிவாரண நிதியத்தால், நிறுவப்பட்ட புற்றுநோய் நிறுவனத்தில், சேர்ந்து அதன் நிர்வாக தலைவரானார். உலகின் உயரிய விருதான நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன் எஸ். சந்திரசேகர் ஆகியோரின் குடும்பத்தில் 1927 மார்ச் 11-ல் பிறந்தவர் வி.சாந்தா. இன்று வி.சாந்தா அவர்களின் பிறந்த தினம்
0
Leave a Reply