25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சோயா கீமா கோலா உருண்டை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சோயா கீமா கோலா உருண்டை

தேவையான பொருட்கள்: * மீல் மேக்கர் - 1 கப், வெங்காயம் - 3 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) * பூண்டு - 2 டீஸ்பூன் (நறுக்கியது) * கொத்தமல்லி - 1/2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) எப்பவும் பச்சை பயறை கடையாம.. ஒருமுறை இப்படி குழம்பு செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. * அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன் * பொட்டுக்கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன் * உப்பு - சுவைக்கேற்ப மீல் மேக்கரை வேக வைப்பதற்கு... * பால் - 2 டீஸ்பூன் * தண்ணீர் - தேவையான அளவு மீல் மேக்கருடன் அரைப்பதற்கு... * சோம்பு - 3/4 டீஸ்பூன் * பச்சை மிளகாய் - 1 * கசகசா - 3/4 டீஸ்பூன் * பட்டை - 1/4 இன்ச் * கிராம்பு - 1 

செய்முறை: * முதலில் பாத்திரத்தில் பால் மற்றும் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் மீல் மேக்கரைப் போட்டு 3-5 நிமிடம் வேக வைத்து இறக்கி, 15 நிமிடம் அப்படியே ஊற வைத்து, நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில் இரண்டு முறை அலசிக் கொள்ளவும். * பின் மீல் மேக்கரில் உள்ள நீரை கையால் பிழிந்து கொள்ளவும். * பின்பு மிக்ஸி ஜாரில் மீல் மேக்கரைப் போட்டு, அத்துடன் சோம்பு, பச்சை மிளகாய், கசகசா, பட்டை, கிராம்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். * பிறகு அதை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். * பின் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். * இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், தீயை குறைத்துவிட்டு, உருட்டிய உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான சோயா கீமா கோலா உருண்டை தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News