25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


புத்திசாலித்தனம்  நிறைந்த சிலந்திகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புத்திசாலித்தனம் நிறைந்த சிலந்திகள்

இயற்கை எல்லா உயிர்களுக்கும் தனித்த திறன்களைத் தந்துள்ளது அவற்றை வைத்து அவை தங்கள் உணவு, பாதுகாப்பு, இனப் பெருக்கம் ஆகிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றன. பூச்சிகளில் சிலந்திகள் மிகவும் புத்திசாலித்தனம் நிறைந்தவை. இவற்றின் அறிவாற்றல் குறித்து ஏற்கனவே பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் விஞ்ஞானிகள் இதுவரை அறியப்படாத சிலந்தியின் ஆற்றலைக் கண்டறிந்துள்ளனர்.

சின்ஹுயாபு எனும் ஆய்வாளர் சிலந்திகளின் வலையில் சிக்கும் மின்மினிப் பூச்சிகளை ஆராய்ந்த போது, அவை பெரும்பாலும் ஆண் பூச்சிகளாகவே இருப்பது தெரிய வந்தது. பொதுவாக மின்மினிப் பூச்சிகளில் பெண், ஆண் பூச்சிகள் வெவ்வேறு விதமாக ஒளிரும்.'பூச்சி இனப்பெருக்கம். செய்வதற்கான சமிக்ஞையாக சிலவிதமான ஒளிகளை உருவாக்கும். பெண் பூச்சி பதில் சமிக்ஞையை ஒருவித மான ஒளி மூலம் காட்டும். இதைப் பார்த்த பின் ஆண்பூச்சி, பெண் பூச்சியை நோக்கி வரும். இதை எப்படியோ உணர்ந்த சிலந்திகள் தங்கள் தந்திரோபாயத்தைப் பயன்படுத்துகின்றன.

வைரஸ் கொண்டு கணினியை ஹாக் செய்வதுபோல தன் வலையில் சிக்கும் ஒரே ஓர் ஆண் பூச்சி யைக் கடித்து, அதைப் பெண் பூச்சி போல் ஒளிரச் செய்கிறது தந்திரக் கார சிலந்தி. இதைக் காணும் ஆண் பூச்சி, பெண் பூச்சி தான் தங்களுக்குச் சமிக்ஞை தருகிறது என்று எண்ணி சிலந்தி வலையில் பரிதாபமாகச் சிக்கிக் கொள்கின்றன. பிறகு என்ன? மின்னுவதெல்லம் பெண் என்று எண்ணி வந்த அத்த அப்பாவி ஆண் பூச்சிகளைச் சிலந்தி தன் ஆகாரம் ஆக்கிவிடும். சிலந்தி எப்படி ஆண் பூச்சியை பெண் போல் ஒளிரச் செய்கிறது என்பது குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News