மார்கழி மாதம் துவங்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் பனங்கிழங்கு சீசன்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவார நகரில்திருவண்ணாமலை, செண்பகத்தோப்பு, மம்சாபுரம் தோப்புகளில் ஆண்டு தோறும் பனங்கிழங்குகள் விளைச்சல் .பனை விவசாயிகள் மண்ணில் இருந்து தோண்டி எடுத்து சுத்தம் செய்து சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். மார்கழி மாதம் துவங்கும் பனங்கிழங்கு விற்பனை மாசி, பங்குனி மாதம் வரை நடக்கும். ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள பல்வேறு பஜார் வீதிகளில் வியாபாரிகள் 25 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ. 100 முதல் 200 வரை விற்கின்றனர்.மனிதர்களின் உடல் நலனுக்கு மிகவும் உகந்தது என்பதால் , வேலைக்குசென்று திரும்பும் பெண்கள் ஆர்வத்துடன் பனங்கிழங்குகளை வாங்கி செல்கின்றனர்
0
Leave a Reply