ஆண்டவன் மேல் பாரத்தை போட்ட சூரி இப்போது பல மடங்கு சம்பாதித்து வருகிறார்.
சூரி சினிமாவுக்கு நடிக்க வந்த புதிதில் பல அவமானங்களை சந்தித்துள்ளார். அதிலிருந்து படிப்படியாக வளர்ந்து காமெடி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார். பெரும்பாலும் சிவகார்த்திகேயன், சூரி காம்போவில் வெளியாகும் படங்களுக்கு மக்கள் நல்ல ஆதரவு கொடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து சூரி ஆலமரமாய் தற்போது வளர்ந்து நிற்கிறார்.மதுரையில் சொந்தமாக ஹோட்டல், சென்னையில் தனக்கு தேவையான அளவு சொத்து என, பல வசதி வாய்ப்புடன் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் கதாநாயகனாக நடித்து, சூரி நடிப்பில் வெளியான விடுதலை படத்திற்கு ,ரசிகர்கள் ஏகபோக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி அவருடைய நடிப்புக்கு, சூப்பர் ஸ்டார் முதல் பல பிரபலங்கள், பாராட்டுகளை கூறிவருகிறார்கள். விடுதலை படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி உள்ளது.கடைசியாக ஆண்டவன் மேல் பாரத்தை போட்ட சூரி இப்போது பல மடங்கு சம்பாதித்து வருகிறார். பார்க்கும் இடமெல்லாம் சொத்துக்களை வாங்கி குவித்து வருகிறாராம். நடிக்க வந்த புதிதில் பல அவமானங்களை சந்தித்து,ஒரு கதவை மூடினால் கண்டிப்பாக இன்னொரு கதவு திறக்கும் என்பது போல அவமானப்பட்டாலும் தன்னுடைய கடின உழைப்பால் சூரி முன்னேறி உள்ளார்.
0
Leave a Reply