25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


உடலுக்கு உழைப்பு, மூளைக்கு வேலை, வெற்றி தோல்விகளை சமமாக பார்க்கும் திறனை எல்லாம்குழந்தை பருவத்தில் தந்த கோலி குண்டு விளையாட்டு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உடலுக்கு உழைப்பு, மூளைக்கு வேலை, வெற்றி தோல்விகளை சமமாக பார்க்கும் திறனை எல்லாம்குழந்தை பருவத்தில் தந்த கோலி குண்டு விளையாட்டு.

கோலி குண்டு விளையாட்டு உடலுக்குஉழைப்பு, மூளைக்கு வேலை, வெற்றி தோல்விகளை சமமாக பார்க்கும் திறனை எல்லாம்குழந்தை பருவத்தில் தந்த பல ஆலமரத்தடி விளையாட்டுகள் காலப்போக்கில்காணாமல் போய்விட்டன. 

 2 அல்லது அதற்கு மேற்பட்ட சிறுவர்கள் விளையாடும்,கோலி என்பது 1 செ.மீ விட்டம் கொண்ட பளிங்கு அல்லது சிறிய வண்ண கண்ணாடி பந்து வடிவங்கள் ஆகும்.நிலத்தில் ஒரு ஆழ மற்ற குழி தோண்டப்பட்டு, அந்த குழியை நோக்கி கை விரல்களின் உந்து விசை அடி மூலம் கோலியை அடித்து குழியில் விழ வைக்க வேண்டும்.

இந்த செயல்முறையில் இடது கையின் ஆள்காட்டி விரலில் பளிங்கு கோலி பிடிக்கப்பட்டு, பின்னர் வலது கையின் ஆள்காட்டி விரலின் அழுத்தத்தால் வில் நாண் போல பின்னால் விரல் வளைக்கப்பட்டு பின்னர் கோலி விடுவிக்கப்படும். இடது கட்டைவிரல் தரையில் உறுதியாக தொட்ட நிலையில் இருக்கும்.

இந்த விளையாட்டில், சிறு வயதில் உடல் முழுவதும் பல வடிவங்களில் செயல்படுவதால் கால் முதல் கை விரல்கள் வரை ரத்த ஓட்டம் நன்றாக பாய்கிறது. கண்கள் கோலி குண்டு நகரும் திசையை பல்வேறு கோணங்களில் பார்க்கும். குறி வைக்க வேண்டும் என்பதால் கண் தசைகள் மற்றும் மூளை நன்கு இயங்கும். குறிப்பாக, கை விரல்கள் தூண்டப்படும்போது உடலின் பல உறுப்புகள் நன்கு இயங்கும் என்று உடல் நல ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இன்றைக்கு, இது போன்ற விளையாட்டுகள் காணாமல்போய் சிறுவர்கள் செல்போன்களில் மூழ்குவது வேதனையானது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News