ராஜபாளையம் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால்சாரல் மழை
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இத னால் அய்யனார் கோவில், சாஸ்தா கோவில் மலை பகு திகளுக்குள் சுற்றுலா பயணிகள், பக்தர்கள், விவசாயிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் ஓடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித் துள்ளது.
மேலும் அருவிகளிலும் நீர்வரத்து உள்ளதால் வனப் பகு திக்குள் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல நேற்றும் நகர் பகுதிகளிலும் மற்றும் சத்திரப்பட்டி, அய்ய னாபுரம், சேத்தூர், தளவாய்புரம், முகவூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன் புத்தூர் பகுதிகளிலும் சாரல் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
0
Leave a Reply