25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


திருமங்கலம் இராஜபளையம் நான்கு வழிச்சாலை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருமங்கலம் இராஜபளையம் நான்கு வழிச்சாலை

மதுரை மாவட்டத்தையும், கேரளாவின் கொல்லம் நகரத்தையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 744. மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டத்தின் முக்கிய நகரங்களான T. கல்லுப்பட்டி, ஸ்ரீலில்லிபுத்தூர், இராஜபாளையம், சிவகிரி, வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை நகரங்களின் மையப்பகுதி வழியாக செல்கிறது. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பஸ், லாரி, கனரக வாகனங்கள் பயணித்து வருகிறது. இதனால் திருமங்கலத்தில் இருந்து செங்கோட்டை வரை போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்த வழித்தடத்தை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டுமென்ற மூன்று மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.முதலில் 60 மீட்டர் அகலத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிட்ட நிலையில் விவசாய நிலங்கள், மரங்கள், கிணறுகள் அதிகம் பாதிக்கப்படும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், 45 மீட்டர் அகலத்தில் நான்கு வழி சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி முதற்கட்டமாக திருமங்கலத்தில் இருந்து இராஜபாளைமய் வரையுள்ள 716 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.1264 கோடி நிதி ஒதுக்கி கடந்த பலமாதங்களாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக திருமங்கலத்தில் இருந்து இராஜபாளைய் வரை இருந்த மரங்கள் அகற்றப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் விறு விறுப்புடன் நடந்து வருகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News