25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வாய் புண்களை போக்க .....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாய் புண்களை போக்க .....

சில நேரங்களில் வாய் கொப்பளங்கள் வரும். இவை சிறிய, சிவப்பு மற்றும் வலி மிகுந்து இருக்கும்வாய் புண்.பல சமயங்களில் இந்த வகையான வாய் புண் காரமான உணவு அல்லது வாயில் காயம் காரணமாக ஏற்படுகிறது.இந்த கொப்புளங்கள் சில நாட்களுக்குள் தானாகவே குணமாகும். ஆனால் வாய் புண் ஏற்படும் போது சாப்பிடுவது, குடிப்பது மற்றும் பேசுவதில் சிக்கல்களை ஏற்படுத்தும்.பல சமயங்களில் காரமான அல்லது புளிப்பு.உணவுகளை உண்பது அல்சரை உண்டாக்கும்.வைட்டமின் பி-12, ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து குறைபாடு வாய் புண்களை ஏற்படுத்தும்வாய் புண் இருந்தால் வீட்டு வைத்தியத்தை பின்பற்றுவதன் மூலம் அதை குறைக்கலாம்.

உப்பு நீரால் வாயைக் கொப்பளிப்பதன் மூலம் புண்களின் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கலாம். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் உப்பு கலந்து வாயை கொப்பளிக்கலாம்

மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. சிறிது மஞ்சளை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து புண்களின் மீது தடவவும். இவ்வாறு செய்வதால் வாய் பண் குறையும்

பேக்கிங் சோடா புண்களை உலர்த்துகிறது. சிறிது பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து புண்களின் மீது தடவவும்

அலோ வேரா ஜெல் அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகளைக் கொண்டுள்ளது. கற்றாழை ஜெல் எடுத்து புண்களின் மீது தடவவும்.

மணத்தக்காளி கீரையை நன்கு அலசி அப்படியே வாயில் போட்டு மென்று தின்றால் வாய்ப்புண் குணமாகும். அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண்ணும் குணமாகும்.பொதுவாக வயிற்றில் புண் இருந்தால் வாயில் புண் வரும் என்பார்கள்.

முள்ளங்கிச் சாறு எடுத்து குடிக்கலாம்.

தேங்காய்ப்பாலுடன் பனங்கல்கண்டு சேர்த்து வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

சோறு கொதிக்கும் போது, அதிலிருந்து ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து , அதோடு வெண்ணெய் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம்.

B complex — ரிபோஃப்ளோவின் மாத்திரை எடுத்துக் கொள்ளலாம்.

நிறைய தண்ணீர் குடியுங்கள்.

இளநீர், மோர், எலுமிச்சை சாறு போன்றவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News