நகம் உடையாமல் இருக்க
நகங்கள் உடைந்து கொண்டேயிருந்தால், ஒரு லிட்டர் தண்ணீரில் ஐந்து ஸ்பூன் கல் உப்பைக் கலந்து 15 நிமிடங்கள் வரை கையை அதில் வைத்திருங்கள். பின்னர் வெளியே எடுத்து நெயில் சாஃப்ட்னர் அப்ளை செய்து கொள்ளுங்கள்.
இரும்பு, கால்சியம் சத்துள்ள உணவுகளை அதிகம் எடுக்க நகம் உடையாமல் இருக்கும்.நகம் கடிக்கும் பழக்கம் கூடவே கூடாது குளித்தவுடன் தேங்காயெண்ணெய் தடவி நகம் வெட்டுகள் எளிது .நகங்களில் மஞ்சள் நிறமிருந்தால், தண்ணீரில் சமோமைல் ( அரோமா பொருட்கள் கிடைக்கும் கடைகளில் கிடைக்கும்) இரண்டு ஸ்பூன் சேர்த்து இருபது நிமிடங்கள் வரை நன்றாக காய்ச்சவும். சூடு குறைந்ததும் அதில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை அதில் நகத்தை வைத்து எடுக்க வேண்டும். வாரத்திற்கு மூன்று முறை இப்படிச் செய்யலாம். இத்துடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறையும் கலந்து கொள்ளலாம்.
சருமப்பகுதியை விட நகங்களை சுற்றியிருக்கும் பகுதி 10 மடங்கு நுண்ணியது. எளிதில் காயம் ஏற்படவும், நோய்த்தொற்று ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உண்டு. இதனை தவிர்க்க நெயில் க்ரீம் பயன்படுத்தலாம். வேகமாக நகம் வளர வேண்டும் என்கிறவர்கள் ஜெலட்டினை பயன்படுத்தலாம், இவை நகம் வளர்வதற்கு உறுதுணையாய் இருக்கும்.
0
Leave a Reply