25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


3000 இந்திய ஊழியர்களை  அமெரிக்காவின் ஆரக்கிள் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

3000 இந்திய ஊழியர்களை அமெரிக்காவின் ஆரக்கிள் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

இந்தியாவில் உள்ள சுமார் 3,000 ஊழியர்களை அமெரிக்க மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள் பணிநீக்கம் செய்துள்ளதாக வெளியான தகவல் தொழில்நுட்ப துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பணிநீக்க நடவடிக்கையால், சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட், வாடிக்கையாளர் மேலாண்மை மற்றும் கிளவுட் சேவைகள் போன்ற துறைகளில் உள்ள ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 ஆரக்கிள் நிறுவனம் ஓப்பன் ஏஐ நிறுவனத்துடனான ஒப்பந்தத்திற்கு பிறகு, இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு துறையில் ஆரக்கிள் நிறுவனம் அதிக கவனம் செலுத்துவதால், பல ஊழியர்களின் பங்களிப்பு இனி தேவையில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

 இந்தியாவில் உள்ள பல ஊழியர்கள் பணிநீக்கத்தால்,  தங்கள் வேலையை இழந்துள்ளனர். இது தகவல் தொழில்நுட்ப துறையில் ஒரு நிலையற்ற சூழலை உருவாக்கியுள்ளது. ஆரக்கிள் போன்ற ஒரு பெரிய நிறுவனம் இந்த முடிவை எடுத்தது, மற்ற ஐடி நிறுவனங்களுக்கும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, மனித ஊழியர்களின் வேலைவாய்ப்பை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News