வெயிலினால் ஏற்படும் முகம் எரிச்சலை சரி செய்ய தர்ப்பூசணி
தர்ப்பூசணி சாற்றை ஒரு பவுலில் எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் வெள்ளரிக்காய் எடுத்து அதனை மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ள வேண்டும். இதனை வடிக்கட்டி வெறும் சாற்றை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். இவை இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதனை ஒரு காட்டன் துணியால் நனைத்து கொண்டு முகத்தில் அப்பளை செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி விடும்.
தர்பூசணியை எடுத்து மிக்சி ஜாரில் எடுத்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ள வேண்டும். நீங்கள் வெயிலில் சென்று வீட்டிற்கு வந்தவுடன் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதன் பிறகு பிறகு இந்த தர்பூசணி பேஸ்ட்டை முகத்தில் அப்பளை செய்ய வேண்டும். இதனை முகத்தில் ஒரு 15 நிமிடத்திற்கு வைத்து விட்டு அதன் பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் வெயிலினால் ஏற்படும் முகம் எரிச்சலை சரி செய்ய முடியும்.
0
Leave a Reply