25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


AI அசுர வளர்ச்சியால் ,25,000க்கும் மேற்பட்டோரை வீட்டுக்கு அனுப்பிய Intel
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

AI அசுர வளர்ச்சியால் ,25,000க்கும் மேற்பட்டோரை வீட்டுக்கு அனுப்பிய Intel

25,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல்வேலையிலிருந்து நீக்க திட்டமிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்டுள்ள இந்த செய்தி, அசுர வளர்ச்சி கண்டுவரும் AI தொழில்நுட்பம், இன்டெல் ஊழியர்களின் வாழ்க்கையிலும் நிறுவனம் விளையாட தொடங்கியுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

செலவுகளை குறைக்கும் நிறுவனத்தின் மிகப்பெரிய நடவடிக்கையாக ,இன்டெல் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதமே 15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில், தற்போது மேலும்25,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலை நீக்கம் செய்யத் திட்டமிட்டிருப்பது, ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

உலக அளவில் சிப் சந்தையில் முன்னணி இடத்திலிருந்த இன்டெல், கடந்த சில ஆண்டுகளாக போராடி வருவதாக கூறப்படுகிறது. 1990களில் மைக்ரோபிராசஸர் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்திய போதிலும், ஸ்மார்ட்போன்களின் எழுச்சியை இந்நிறுவனம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதுவே இன்டெல் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.

தற்போது உலகின் அடுத்த தலைமுறை தொழில்நுட்பமாக பார்க்கப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) சிப் பிரிவில், என்விடியா (Nvidia) போன்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இன்டெல் பின்தங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.AI தொழில்நுட்பம் உலக அளவில் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுவரும் நிலையில், இன்டெல் நிறுவனத்தின் சிப் தயாரிப்புகள் இந்தச் சந்தையில் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News