இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலகச் சுற்றுச் சூழல் தினம்
இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலகச் சுற்றுச் சூழல் தினம் பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக திருமதி. R. விஜயலட்சுமி, Master NLP practitioner அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
பள்ளி முதல்வர் திரு.கோபாலகிருஷ்ணன் அவர்கள் அனைவரையும் வரவேற்று சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.
மேலும்,இன்றைய தினத்தின் கருப்பொருள் 'Beat plastic pollution'என்ற வாசகத்தினை அனைவர் மனதிலும் பதிய வைத்தார்.
பள்ளித் தாளாளர் சிறப்பு விருந்தினரை கௌவரம் செய்து தனது உரையில் இந்த சுற்றுப்புற சூழலின் Motto Save the Earth, Save Yourselves, Think Green,Be Green,Beat the plastic என்பதையும், மனச் சுழலையும், சுற்றுச் சூழலையும் சரி செய்வது அவசியம் என்பதையும் எடுத்துரைத்தார்.
சுற்றுச்சூழல் காப்போம்", Demerits of plastics என்பன பற்றி மாணவிகளும் , சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதன் அவசியத்தைப் பற்றிய உரையை தமிழாசிரியையும் எடுத்துக் கூறினர். சேர்ந்திசைப் பாடல் மூலமாக மாணவிகள் இயற்கையைக் காப்போம் என்ற விழிப்புணர்வுப் பாடலையும் பாடினர்.
சிறப்பு விருந்தினர் தமது உரையில் If I can't help myself, how can I help others? என்ற கேள்வியை எழுப்பினார். மேலும் சுற்றுப்புறச் சூழலை எப்படி, எதைச் செய்வதன் மூலம் பாதுகாக்கலாம் என்று மாணவர்களிடையே உரையாடல் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். உரையாடலில் மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
விழாவில் பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் திருமதி. ரமணி சந்திரசேகர் ராஜா மற்றும் திருமதி. ரம்யா மோகனும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0
Leave a Reply