பஜ்ஜி மாவில் தக்காளி சாஸ் கலந்து பஜ்ஜி சுட்டால் சுவையும் கலரும் வித்தியாசமாக இருக்கும்
எலுமிச்சை சாதம் செய்யும்போது, இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்து வதக்கி, பின் சாதம் போட்டுக் கிளறினால் சுவையாகவும், மாறுதலாகவும் இருக்கும்.
தேங்காய் சாதம், புளி சாதம், மாங்காய் சாதம், எலுமிச்சை சாதங்களுக்கு முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்துச் சேர்த்தால் வாசனை தூக்கும். பார்ப்பதற்கும் அழகஇருக்கும்.
சிறிது தனியாவையும், காயவைத்த 2 மிளகாயையும் எண்ணெயில் விட்டு வறுத்துப் பொடி செய்துகொண்டு, கலந்து வைத்திருக்கும் எலுமிச்சம்பழச் சாதத்தில் தூவிக் கிளறினால், தனியா பொடிஊறிஎலுமிச்சைசாதம்ருசிஅபாரமாகஇருப்பதுடன், வித்தியாசமாகவும் கலராகவும் இருக்கும்.
பாசிப்பருப்பை குக்கரில் வேக வைக்கும்போது. குழைந்து விடாமல் பருப்பு இதழ் இதழாக இருக்க! மூடியுள்ள ஒருபாத்திரத் தில் பருப்பை போட்டு, இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி அரை ஸ்பூன் உப்பு சேர்த்து மூடி, குக்கரில் வேக வைத்தால்... பருப்பு நன்றாக வெந்திருக்கும்.
பஜ்ஜி மாவில் தக்காளி சாஸ் கலந்து பஜ்ஜி சுட்டால் சுவையும், கலரும் வித்தியாசமாக இருக்கும்.
0
Leave a Reply