25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க அரிசி கழுவிய நீரில் முருங்கைக்கீரை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க அரிசி கழுவிய நீரில் முருங்கைக்கீரை.

கர்ப்பப்பை கோளாறு குணமாக-  தினசரி ஒரு நெல்லிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும் நெல்லி  ரத்தத்தை சுத்தமாக்கித் தருகிறது.

சுகபிரசவம் ஆக குங்குமப் பூவை வெற்றிலை பாக்குடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

மாதவிலக்கில் ரத்தப் போக்கு நிற்க: இலவங்கப்பட்டையை பொடி செய்து இரண்டு கிராம் அளவு தினமும் சாப்பிட வேண்டும்.

மலச்சிக்கல் தீர முட்டைக்கோஸை பொடிபொடியாக அரிந்து, மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து சூப் வைத்து இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் குடிக்கவும்.

நன்கு பசி எடுக்க இஞ்சி, கிராம்பு, சோம்பு இவைகளை வாயில் போட்டு மென்ற வெந்நீரில் வாய் கொப்பளிக்கவும்.

பல் வலி தீர: மிளகுத் தூளுடன் உப்புசேர்த்து பல் துலக்கவும். மிளகுத் தூளுடன் கிராம்புத் தைலம் சேர்த்து பல் ஈறுகளில் தடவலாம்.

கெட்ட கொழுப்பு கரைய: பசலைக் கீரையுடன் மிளகு, பூண்டு, வரமிளகாய் சேர்த்து கூட்டு அல்லது குழம்பு வைத்து சாப்பிட்டு வரலாம்.

சர்க்கரை சரியாக: வெந்தயம், நாவல் கொட்டை, நெல்லி ஓமம் இவைகளை சேர்த்து  பொடியாக்கி வெந்நீரில் கலந்து இரண்டு வேலையும் குடிக்கவும்.

காயங்கள் ஆற: வேப்ப மரத்தின் கொழுந்து இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து காயங்கள் அல்லது புண்கள் மீது தடவ  வேண்டும்.

அரிசியை இரண்டாவது முறை கழுவிய நீரில் முருங்கைக்கீரை, உப்பு, தக்காளி, சின்ன வெங்காயம் சேர்த்து குக்கரில் வைக்கவும். ஒரு விசில்விட்டு இறக்கி, நீரை வடிகட்டி குடித்து வந்தால்,உடம்பில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பப்பாளி இலைகளை அரைத்து கை,கால் குடைச்சலுக்கு பற்று போட்டு, வெந்நீரில் கழுவி வர வலி குறையும், 2.மாம்பழ துண்டுடன் தேன், குங்குமப்பூ, ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம், பால் ஆகியவை சேர்த்து சாப்பிட்டு வர உடல் பலம் பெறும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *