ஆசிய விளையாட்டுப் போட்டி: மனு பாக்கர் தலைமையில் பலமான இந்திய அணி அறிவிப்பு!
செப்டம்பரில் ஜப்பானில் தொடங்கும் துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கான 30 பேர் பட்டியல் வெளியீடு.
ஜப்பானில் வரும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று வரலாறு படைத்த மனு பாக்கர் இந்த அணியை முன்னின்று வழிநடத்துகிறார். அவருடன் முன்னாள் உலக சாம்பியன் ருத்ரான்ஷ் பட்டீல், இஷா சிங், ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர், இளவேனில், அனிஷ் பன்வாலா, சுருச்சி, ரைஜா தில்லான், மகேஸ்வரி சவுகான் உள்ளிட்ட 30 நட்சத்திர வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டைக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
0
Leave a Reply