25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஊரகப் பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு வரைபடங்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஊரகப் பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு வரைபடங்கள்

மக்களவை பொதுத்தேர்தல் 2024 வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, 18 வயது நிரம்பிய வாக்காளர்கள், அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறும் வகையில் மாவட்டத்திலுள்ள ஊரகம், நகர்புறம், பேரூராட்சிகள், மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி, வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமும், பதாதைகள், சுவரொட்டிகள், வாகனங்களில் ஒட்டு வில்லைகள், உணவகங்கள், பல்பொருள் அங்காடிகளில் பொதுமக்கள் வாங்கும் பொருட்களில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகள் மூலம் தொடர்ச்சியாக விழிப்புணர்வுகள் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக சிவகாசி ஊராட்சி ஒன்றியம், ஆனையூர் கிராம ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு வரைபடங்கள் வரையப்பட்டு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்று மாவட்டத்தின் பல்வேறு ஊரக பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் விழிப்புணர்வு வரைபடங்கள் வரையப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.இந்த ஜனநாயக திருவிழாவில் 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும், வாக்களிப்பதன் மூலம் தங்களது பங்களிப்பை வழங்கி மாவட்டத்தில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு இலக்கை அடைய ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News