“தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா” என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு பேருந்து
விருதுநகர் மாவட்ட ஆட்சியரகம் அலுவலக வளாகத்தில் (28.03.2024) மக்களவைத் தேர்தல்- 2024 யை முன்னிட்டு வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி “தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா” என்ற தலைப்பில் இந்திய ஜனநாயக திருநாட்டின் தேர்தலின் வரலாற்றை எடுத்துக்கூறும் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு பேருந்துகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தொடங்கி வைத்து, புகைப்படங்களை பார்வையிட்டார்.
மக்களவைத் தேர்தல்- 2024 நடைபெறயுள்ளதையொட்டி வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பெறாமல் நியாயமான முறையில் வாக்களிப்பதை வலியுறுத்தியும் நாள்தோறும் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்ட ஆட்சியரகம் அலுவலக வளாகத்தில் வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பெறாமல் நியாயமான முறையில் வாக்களிப்பதை வலியுறுத்தியும், இந்திய திருநாட்டின் பாராளுமன்றத் தேர்தல்கள் குறித்த வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியுடன் கூடிய விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு வாகனத்தில் “தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா” என்ற தலைப்பில் முதல் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் வாக்களித்தது, நாடு முழுவதும் பெண் வாக்காளர்களுக்கு வாக்குபதிவு மையங்கள் ஒதுக்கப்பட்டது, வாக்களிக்கும் வயது 21-லிருந்து 18 வயதாக குறைத்தது, புகைப்பட வாக்காளர் அட்டைகளை அறிமுகப்படுத்தியது, உலகின் மிக உயரமான வாக்குசாவடி மையம் உள்ள இமாச்சல பிரதேசம், தாசிகேங் பகுதிகளில் வாக்கு பதிவு நடைபெறுவது, இந்திய தேர்தல் ஆணையம் எந்த ஒரு வாக்காளரும் விடுபட கூடாது என்பதை கொள்கையாக கொண்டு இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் வாக்கு பதிவை நடத்தும் விதங்கள் உள்ளிட்ட இந்திய ஜனநாயக தேர்தலின் வரலாற்றை எடுத்துக்கூறும் விதமாக புகைப்படங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த வாக்காளர் விழிப்புணர்வு வாகனம் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள், பேருந்து நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் அனைத்து பகுதிகளுக்கு சென்று வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.
மேலும், மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது, வாக்காளர் சரிபார்பு தணிக்கை முறையில் (VVPAT) வாக்களித்ததை எவ்வாறு உறுதி செய்வது, வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்யும் வழிமுறைகள், வாக்காளர் பட்டியில் பெயரை தேடுதலுக்கான வழிமுறைகள், வாக்களிப்பதற்கான அடையாள ஆவணம் மற்றும் அடையாள அட்டைகள், தேர்தல் தொடர்பான புகார்களை அளிப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு வாக்காளர் தொடர்பான தகவல்கள் அடங்கிய வாக்காளர் கையேட்டினை மாவட்ட தேர்தல் அலுவலர்ஃமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார்.வாக்காளர்கள் அனைவரும் 100 சதவிகிதம் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றும், நேர்மையான, நியாயமான, வெளிப்படை தன்மையுடன் தேர்தல் நடைபெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
0
Leave a Reply