25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


விளைச்சல் நன்றாக இருக்க நல்ல ஒரு உரம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளைச்சல் நன்றாக இருக்க நல்ல ஒரு உரம்

செடிகளுக்கு எல்லாம் நம் வீட்டில் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தியது போக மீதி இருக்கும் காய்கறி கழிவுகளே நல்ல ஒரு இயற்கையான உரம். இவைகளை அப்படியே காய வைத்து உரமாக கொடுத்தாலும் அல்லது தண்ணீரில் போட்டு நொதிக்க விட்டு அதை தண்ணீருடன் கலந்து தெளித்தாலும் இந்த தண்ணீரில்அத்தனை சத்துக்கள் உள்ளது. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு பொருளை வைத்து தான் மிக மிக எளிமையாக இந்த உரத்தை தயார் செய்யலாம். 

இந்த உரம் தயாரிக்க 50 கிராம் கடுகு இருந்தால் போதும், 30 செடிகளுக்கு இதை பயன்படுத்தி உரம் கொடுக்கலாம்.  முதலில் கடுகை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பைன் பவுடராக அரைத்து வைத்து இந்த பவுடரை அரை லிட்டர் தண்ணீருக்கு ஒரு ஸ்பூன் வீதம் கலந்து செடிகளுக்கு உரமாக கொடுக்க வேண்டும். இதை அப்படியே கலந்து கொடுக்கக் கூடாது.

இந்த கடுகு உரத்தை கொடுப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே அரை லிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு கலந்து வைத்து, இந்த தண்ணீர் நன்றாகநொதித்து  நுரை பொங்கி இருக்கும். அதன் பிறகு இந்த தண்ணீரை5 லிட்டர் தண்ணீரில் கலந்து அந்தத் தண்ணீரை செடிகளுக்கு ஸ்பிரே போல அடித்து விட வேண்டும்.  வேர்களுக்கு இந்த தண்ணீரை ஊற்றும் போது மண்ணில் கலந்து நல்ல ஒரு உரமாக மாறும்.இந்த உரத்தை தெளிப்பதற்கு முன் செடிகளில் உள்ள பழுத்த இலைகள், பூச்சி அரித்த இலைகள் ஆகியவற்றை நீக்கி விட வேண்டும். அது மட்டுமின்றி செடிகள் பூத்து முடித்துஇருந்தாலும் ,காய்கறி செடிகள் காய் வைத்து முடித்து இருந்தாலும், அதன் முனைகளை எல்லாம் நறுக்கி எடுத்து விட்ட பிறகு, இந்த உரத்தை ஊற்றினால் ,அடுத்த விளைச்சல் மிகவும் நன்றாக இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News