25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


4,200 கி.மீ., கடல் கடந்து , பறக்கும் ஓர் அதிசய பட்டாம்பூச்சி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

4,200 கி.மீ., கடல் கடந்து , பறக்கும் ஓர் அதிசய பட்டாம்பூச்சி

பலமான காற்று அடித் தால் விழுந்துவிடும் பலவீனமான உயிரி தான் பட்டாம்பூச்சி. ஆனால், ஓர் அதிசய பட்டாம்பூச்சி இனம் 4,200 கி.மீ., கடல் கடந்து பறந்து செல்கிறதாம். இதை ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஐபீஇ (BE) பல்கலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தத் தொலைதூரப் பயணத்தை வெறும் 5 முதல் 8 நாட்களுக்குள் நிறைவு செய்கிறது இந்தப் பட்டாம்பூச்சி. இந்த அரும்பெரும். சாதனையைச் செய்பவை பெயின்டட் லேடி' பட்டாம்பூச்சிகள் (Painted lady butterflies) இவற்றின் அறிவியல் பெயர் வனெசா கார்டுய் (Vanessa cardui). இந்தச் சிறிய உயிரினம் ஒருமுறை போதுமான அளவு உணவை எடுத்துக் கொண்டது என்றால், எங்கும் ஓய்வெடுக்காமல் 780 கி.மீ., பறக்கும். ஆனால், கடக்க வேண்டிய  துாரமோ அதிகம். இந்தப் புத்திசாலி உயிரி இயற்கையாக வீசும் கடற்காற்றை அறிந்து வைத்திருக்கிறது. முற்காலத்தில் பாய்மரக் கப்பல்களில் வணிகம் செய்தவர்கள் இதை அனுசரித்தே பயணம் செய்தனர். இதனால், இதற்கு வணிகக் காற்று  (The trade winds) என்று பெயர் வந்தது. இந்தப் பட்டாம்பூச்சி தனது ஆற்றலையும், காற்றின் போக்கையும் வண்டிய மாற்றி மாற்றிப் பயன் படுத்தி இவ்வளவு நெடிய தூரத்தைக் கடக்கிறது. முதன்முதலில் இவை தென் அமெரிக்காவின் அட்லான்டிக் கரைகளில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த இனம் உலகம் முழுக்க வாழ்ந்தாலும் ஆப்ரிக்கா, ஐரோப்பா, வட, தென் அமெரிக்காவில் வாழ்பவை தான் மரபணு ரீதியாக அதிக நெருக்கத்து படுத்தி இவ்வளவு நெடிய தூரத்தைக் கடக்கிறது. 

முதன்முதலில் இவை தென் அமெரிக்காவின் அட்லான்டிக் கரைகளில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த இனம் உலகம் முழுக்க வாழ்ந்தாலும் ஆப்ரிக்கா, ஐரோப்பா, வட, தென் அமெரிக்காவில் வாழ்பவை தான் மரபணு ரீதியாக அதிக நெருக்கத்துடன் உள்ளன. இதற்குக் காரணம் இவை கடல் கடந்து இனப்பெருக்கம்  செய்வதற்காக இந்த நான்கு கண்டங்களுக்கு இடையே பயணிப்பது தான்.விஞ்ஞானிகள் இந்த இனத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சிகளைச் சோதிக்கும்போது அவை ஆப்பரிக்காவில் மட்டுமே உள்ள சில தாவரங்களின் மகரந்தத்தைச் சுமந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. இதன் வாயிலாக அவை கடலைக் கடப்பதற்கு முன்பு ஆப்பிரிக்காவில் ஆற்றல் தரும் அளவிற்குப் போதுமான உணவை உண்டுள்ளன என்பதை அறிய முடிந்தது. கோடைக்காலத்தில் ஆப்ரிக்காவின் சஹாரா பாலைவனத்திலிருந்து தென் அமெரிக்கா நோக்கி வீசும் காற்று தான் இந்தப் பட்டாம்பூச்சிகளுக்கு உதவுகின்றன என்பதும் தெரியவந்தது. இந்தப் புதிய கண்டுபிடிப்பு பூச்சிகளின் புலப்பெயர்வு, வலசைச் செல்லுதல் பற்றிய நம் அறிதலை இன்னும் மேம்படுத்தி உள்ளது என்கின்றனர் உயிரியலாளர்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News