25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


முருகனின் அறுபடை வீடு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முருகனின் அறுபடை வீடு

முதல் படை வீடு

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், முருகன் தெய்வானையுடன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.இங்கு மலைவடிவில் சிவபெருமான்அருள் புரிகிறார். அமர்ந்த கோலத்தில் முருகன் காட்சியளிப்பது சிறப்பாகும்.

இரண்டாம் படை வீடு

முருகனின் இரண்டாம் படைவீடானதிருச்செந்தூர் கடலோரத்தில் அமைந்துள்ளதால்திருச்சீரலைவாய் என்றும், ஜயந்திபுரம் என்றும் பெயருண்டு. இங்கு முருகப்பெருமான், சூரபத்மனை அழித்ததாக கந்த புராணம் கூறுகிறது.

மூன்றாம் படை வீடு

முருகனின் மூன்றாம் படை வீடான பழநி, சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியாகும். பழநி முருகர் சிலைபோகர் சித்தரால்

நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது.இங்கு, அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் சாப்பிட்டால் சகல நோய்களும் தீரும் 
நான்காவது வீடு

தன்னைவிட தன் பிள்ளைகள்அறிவுடையவர்களாக இருப்பது தந்தைக்கு மகிழ்ச்சியை தரும். அதையொட்டி, தன் பிள்ளையின் வாயால் பிரணவ மந்திரத்தின் பொருளை கேட்டு பிள்ளை குருவாக இருக்க,' தானே சீடனைப்போல் அமர்ந்து கேட்டார்.
அதனால் சிவகுருநாதன் என்ற பெயரை முருகப்பெருமான் பெற் றார்.
ஐந்தாவது வீடு

திருச்செந்தூரில் , சூரனை வதம் செய்த முருகன் திருத்தணிக்கு வந்து கோபம் தணிந்து சாந்தமாக அமர்ந்ததால் தணிகை என இவ்வூர் பெயர் பெற்றது.வேடர்குலத்தில் பிறந்த வள்ளியை, முருகன் காதல் திருமணம் புரிந்து கொண்ட இடமே திருத்தணியாகும்.
ஆறாவது வீடு
அறுபடை வீடுகளில் ஆறாவது வீடாக விளங்குவது சோலைமலை. ஒளவை பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கே ட்ட முருகன், உலக வாழ்க்கைக்கு கல்வியறிவு மட்டும் போதாது. இறையருள் என்னும் மெய்யறிவும் வேண்டும் என்பதை உணர்த்த திருவிளையாடல் புரிந்த இடம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News