25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இராஜபாளையத்தில் சாலைபராமரிப்பு பணியை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையத்தில் சாலைபராமரிப்பு பணியை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம்.

இராஜபாளையம் மெயின் ரோட்டில் மேம்பாட்டு பணிகளால், ஏற்பட்டுள்ள பள்ளங்களை சரி செய்யும் பணி தொடங்கியுள்ளது. எனவே இன்று (நவம்பர் 2) முதல் நகரின் வடக்கு பகுதியில் இருந்து வரும் கார் மற்றும் பயணிகள் பஸ் மட்டும் ,நேரு சிலை சந்திப்பில் திரும்பி, டி.பி.மில்ஸ் ரோடு வழியாக ,காமராஜர் நகர் ரோடு அடைந்து  பஸ் ஸ்டாண்டிற்கும், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து செல்லும் அனைத்து பஸ்களும், காந்தி சிலை ரவுண்டானா வழியாகவும் செல்ல வேண்டும். மேற்கிலிருந்து வரும் பஸ் காந்திசிலை, முடங்கியார் ரோடு, தாலுகா அலுவலகம், நேரு சிலை, டி.பி. மில்ஸ் வழியே பழைய பஸ் ஸ்டாண்ட் வர வேண்டும். தெற்கிலிருந்து வரும் கனரக வாகனங்கள் ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர் சிலை, சங்கரன்கோவில் முக்கு, முதுகுடி, எஸ். ராமலிங்காபுரம், வன்னியம்பட்டி வழியே ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வரும் சரக்கு, கனரக வாகனங்கள் இராஜபாளையம் நகரில் நுழைய அனுமதி இல்லை. வன்னியம்பட்டி, அட்டை மில் முக்கு ரோடு வழியே செல்ல வேண்டும். இராஜபாளையம் நகர் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற உள்ள சாலை பராமரிப்பு பணியை முன்னிட்டு நவம்பர் 2 முதல் 13 வரை போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதாக டி.எஸ்.பி. ப்ரீத்தி தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News