25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற செஸ் வீரர்கள், வீராங்கனைகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற செஸ் வீரர்கள், வீராங்கனைகள்.

.ஐரோப்பிய நாடான ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் செஸ் ஒலிம்பியாட் 45 வது சீசன் சமீபத்தில் நடந்தது. தமிழக வீரர்கள் குகேஷ் ஸ்ரீநாத், பிரக்ஞானந்தா, வைஷாலி உட்பட பலர் பங்கேற்ற இந்தத் தொடரின் 11 சுற்றுகளின் முடிவில், இந்திய ஆடவர் மற்றும் பெண்கள் அணி முதலிடம் பிடித்தது. இதன் வாயிலாக தங்கப் பதக்கஙகளை முதன்முறையாக வென்று வரலாற்ற சாதனையையும் படைத்தது இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட்டில் சாதனைப் படைத்த இந்திய அணியினரை சந்தித்து வாழ்த்து கூற பிரதமர் மோடி முடிவு செய்தார்.

திடீரென இந்த சந்திப்பு முடிவு செய்யப்பட்டது செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்ற கிராண்ட் மாஸ்டர் விதித் குஜராத்தி, அஜர்பைஜானில் நடந்த செஸ் தொடரில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார் இந்திய செஸ் அணியினரை பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானதை அறிந்த அவர், உடனே நாடு திரும்ப முடிவு செய்தார். இதையடுத்து. அஜர்பைஜான் செஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்த அவர், தனக்கு பதிலாக கிராண்ட் மாஸ்டர் அரவிந்த் சிதம்பரம் பங்கேற்பார் ,எனவும் போட்டி குழுவினரிடம் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடிக்கு செஸ் பலகை ஒன்றை, இந்திய செஸ் அணியினர் வழங்கினர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News