25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மாவட்ட அளவிலான சிறந்த இளைஞர் மகளிர்  மன்ற விருது 2021-2022
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்ட அளவிலான சிறந்த இளைஞர் மகளிர் மன்ற விருது 2021-2022

விருதுநகர் மாவட்டத்தில் நேரு யுவ கேந்திரா சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான சிறந்த இளைஞர்,மகளிர் மன்ற விருது வழங்கப்படுகிறது. இவ்வாண்டும் சிறப்பாக செயல்பட்ட இளைஞர்,மகளிர் மன்றத்திற்கு விருது வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது.
தகுதி:
மாவட்டஅளவிலானசிறந்த இளைஞர் மகளிர் மன்ற விருது(ஒன்று):
1. நேரு யுவ கேந்திராவிலும் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலும் பதிவுசெய்து இருக்க வேண்டும.
2. மேலும் பதிவு செய்த மன்றங்கள் 2021-2022-ம் ஆண்டிற்கான வரவு செலவுக் கணக்கினை தணிக்கை செய்திருத்தல் அவசியம்.
3. 01-04-2021 முதல் 31-03-2022 வரை சிறப்பாக பணியாற்றி  இருப்பதற்கான ஆதாரங்கள் இணைக்கப்பட வேண்டும்
4. ரூ.25000/- ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.
5. இதில் தேர்வு செய்யப்படும் மன்றம் மாநில அளவிலான இளையோர் மன்ற விருதுக்கு தேர்வுசெய்து அனுப்பப்படும்.
விருது பெறத் தகுதியுள்ள மன்றங்கள் விண்ணப்ப படிவங்களை மாவட்ட நேரு யுவ கேந்திரா அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை 15.12.2022-ம்  தேதிக்குள் மாவட்ட நேரு யுவ கேந்திராஇகுமாரசாமி ராஜாநகர், மகளிர் காவல் நிலையம் அருகில், விருதுநகர் - 626 002 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக சமர்பிக்கும் படி, நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News