25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இராஜபாளையம் அய்யனார் கோயில் அருகே வன எல்லையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த அகழி மண் மேவியதால் விலங்குகள் விளை நிலங்களுக்குள் புகுந்து சேதம் செய்து வருகின்றன
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் அய்யனார் கோயில் அருகே வன எல்லையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த அகழி மண் மேவியதால் விலங்குகள் விளை நிலங்களுக்குள் புகுந்து சேதம் செய்து வருகின்றன

இராஜபாளையத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி மண் மேவிய அகழியை வனத்துறையினர் பராமரிக்காததால் விளை நிலங்களில் யானைகள் புகுந்து,மா. தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதை தடுக்க வனப்பகுதி எல்லையோரங்களில் யானை அகழிகளை வெட்டுவதோடு, சேதமான மண் மேவிய அகழிகளை செப்பனிடவும் வனத்துறை நடவடிக்கை எடுக்காதது விவசாயிகளை வேதனையடைய செய்துள்ளது.

இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளில் அய்யனார் கோவில் அருகே பல்வேறு இடங்களில் அகழிகள் சேதமடைந்தும், மண்மேவியும் உள்ளதால் யானைகள் வெளியேறும் பாதையாக உபயோகிக்கின்றன. காலப்போக்கில் மண் மூடியதுடன் இவற்றை பராமரிக்காததால் யானைகள் தனியாகவும் கூட்டமாகவும் வந்து சேதம் செய்து வருகின்றன.

இராஜபாளையம் அய்யனார் கோயில் அருகே மண்மேவிய அகழியை செப்பனிடாமல் வைத்துள்ளதால் விவசாயிகளை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.இதற்கு தீர்வாக வனப்பகுதியில் இருந்து வெளியேற முடியாத படி விலங்குகளுக்கு தண்ணீர் ஏற்பாடு செய்வதுடன், புதிதாக நிதி ஒதுக்கி அகழிகள் வெட்டப்பட வேண்டும்.  அதோடு ஏற்கனவே வெட்டப்பட்ட அகழிகளை மண்மேவாமல், சேதமடையாமல் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News