25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு கூடுதலாக தேவைப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு கூடுதலாக தேவைப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (01.04.2024) மக்களவை பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு, விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு கூடுதலாக தேவைப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, இணைய வழியில் சீரற்ற முறையில்  ஒதுக்கீடு செய்யப்படும் பணி தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு.நீலம் நம்தேவ் எக்கா,I A S., அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில்  நடைபெற்றது.
பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிட்டங்கியில் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு.நீலம் நம்தேவ் எக்கா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், அந்தந்த சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சுழி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இணைய வழியில் சீரற்ற முறையில்  ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்தம் 1628 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மக்களவை பொதுத்தேர்தல் 2024 எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, வேட்புமனுக்கள் பெறப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு 27 இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, கூடுதலாக தேவைப்படும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை வழங்கிடும் பொருட்டு, இன்று இணைய வழியில் சீரற்ற முறையில்  ஒதுக்கீடு செய்யப்பட்டு, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 346 வாக்குப்பதிவு இயந்திரங்களும், சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு 333 வாக்குப்பதிவு இயந்திரங்களும், அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு 308 வாக்குப்பதிவு இயந்திரங்களும், விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்கு 308 வாக்குப்பதிவு இயந்திரங்களும்,இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு 333 வாக்குப்பதிவு இயந்திரங்களும் என மொத்தம் 1628 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News