25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ்,  சமுதாய அமைப்பாளர்கள் பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ், சமுதாய அமைப்பாளர்கள் பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ்,  மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் காலியாக உள்ள சமுதாய அமைப்பாளர்கள் பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. இப்பணியிடத்திற்கு கீழ்கண்ட கல்வி மற்றும் அனுபவ தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சமுதாய அமைப்பாளர்கள் பணிக்கான தகுதியான நிபந்தனைகள் : (Eligibility conditions)

 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
 35 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும் (05.08.2024 அன்று).
 ஏதேனும் ஒரு பாடத்திட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
 அரசு சார்ந்த திட்டங்களில் விரிவான களப்பணி மூலம் குறைந்தது ஒரு வருட கால அனுபவம் இருத்தல் வேண்டும்.
 கண்டிப்பாக கணினியில் குறைந்தபட்சம் MS Word, Excel பயன்படுத்த தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.
 பகுதி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
சம்மந்தப்பட்ட பகுதி அளவிலான கூட்டமைப்பிலிருந்து தீர்மானம் நிறைவேற்றி அதற்கான அறிக்கையினை சமர்பிக்க வேண்டும்.
தகவல் பரிமாற்றத்தில் திறமையுடையவராக இருத்தல் வேண்டும்.
 இரு சக்கர வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
 அடிப்படை கணினி திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
 விருதுநகர் மாவட்டத்திற்குள் வசிப்பவராகவும் மற்றும் 2 ஆண்டுகளுக்கு மேலாக அமைக்கப்பட்ட பகுதி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
 நிர்வாகம் மற்றும் நிதி முறைகேடுகள் காரணமாக TNSRLM/Pudhu Vaazhvu Project/IFAD  ஆகிய திட்டத்திலிருந்து பணி நீக்கம்/ தகுதி நீக்கம் செய்யப்பட்டவராக இருத்தல் கூடாது.

மேற்காணும் தகுதிகள் உள்ள நபர்கள் 05.09.2024 தேதிக்குள், மாலை 5.45 மணிக்குள் மேலாளர், நகர்ப்புர வாழ்வாதார மையம், இராஜபாளையம் நகராட்சி – 626117- 04563-296624 / 83445-43852 என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S , அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News