25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அதிகமுறை ஜனநாயக கடமையாற்றிய 95 வயது மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்கினை செலுத்திட படிவம்-12D வழங்கப்பட்டுள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அதிகமுறை ஜனநாயக கடமையாற்றிய 95 வயது மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்கினை செலுத்திட படிவம்-12D வழங்கப்பட்டுள்ளது

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், பாலவநத்தம், விருதுநகர் வட்டம், கூரைக்குண்டு, செவல்பட்டி ஆகிய இடங்களில் வசிக்கும் 95 வயது மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (25.03.2024) நேரில் சென்று, வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்கினை செலுத்திட படிவம்-12னு வழங்கப்பட்டுள்ளதா என கேட்டறிந்து உறுதி செய்தார்.மேலும், அதிகமுறை ஜனநாயக கடமையாற்றிய 95 வயது மூத்த வாக்காளர்களை சால்வை அணிவித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் கௌரவப்படுத்தினார்.இந்திய தேர்தல் ஆணையத்தில் அறிவுறுத்தல்படி, மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் உள்ளிட்ட எந்த வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மூத்த குடிமக்களாகிய நீங்கள் முதல் வாக்கினை பதிவு செய்த போது இருந்த ஆர்வத்தோடு தற்போதும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக்குப்பதிவு மையங்களில் மூத்த குடிமக்களுக்கு இருக்கைகள், சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், மாவட்டத்தில் உள்ள 85 வயது பூர்த்தியடைந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வாக்குப்பதிவு நாளான 19.04.2024 அன்று தங்களுக்கு உரிய வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே 12D படிவம் பெற்று தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்கினை செலுத்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, தாங்கள் தவறாமல் வாக்களித்து மற்ற வாக்காளர்களுக்கு ஒரு உந்துகோலாக அமைய வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News