25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தனித்துவமான பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ள கூகுள் நிறுவனத்தின் தமிழர் சுந்தர் பிச்சை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தனித்துவமான பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ள கூகுள் நிறுவனத்தின் தமிழர் சுந்தர் பிச்சை

 சுந்தர் பிச்சையின் வெற்றி ரகசியமாக , அவர் செல்போன்களை பயன்படுத்தும் விதமும் ஆச்சரியம் அளிக்கிறது.PixelFold எனும் போனை பயன்படுத்தும் சுந்தர் பிச்சை, தன்னுடைய விமான பயணங்களின்போதும், பிஸியான நாட்களிலும் இலகுமான போன்களை வைத்திருக்கவே அவர் விரும்புகிறார்.மின்னஞ்சலை விரைவாக சரிபார்க்க மட்டுமே அவர் அந்த சமயங்களில் செல்போனை பயன்படுத்துகிறார். மேலும், கூகுள் பிக்சல் 7 ப்ரோ, சாம்சங் கேலக்சி மற்றும் ஐபோன் ஆகிய ஸ்மார்ட்போன்களை மதிப்பிடுவதற்காக அவர் பயன்படுத்தி வருகிறார்.அத்துடன் ஒவ்வொரு போனிலும் ஒரு சிம்கார்டை அவர் வைத்திருப்பதாக அவரே கூறியிருக்கிறார். இதுபோன்ற வித்தியாசமான செயல்களும் அவரது வெற்றியின் ரகசியமாக பார்க்கப்படுகிறது

51 வயதாகும் சுந்தர் பிச்சை, பிறரைப் போல் புத்தகம், உடற்பயிற்சிக் கூடம் என்றில்லாமல் தனது நாளை வித்தியாசமான அணுகுமுறையுடன் தொடங்குகிறார்.அவர் முதலில் தொழில்நுட்ப உலகில் மூழ்கிறார். குறிப்பாக, சுந்தர் பிச்சை thelensofTechmemeஐ கையாள்கிறார். இது தினசரி தொழில்நுட்ப செய்திகளுக்காக அவர் அடிக்கடி நாடும் இணையதளம் ஆகும். அதேபோல் பாரம்பரிய மற்றும் டிஜிட்டல் கூறுகளை இணைத்துக் கொள்வதை காலை வழக்கமாக கொண்டுள்ளார். அதாவது, டிஜிட்டல் உலகில் நுழையும் அதே வேளையில் செய்தித்தாளையும் சுந்தர் பிச்சை எடுத்துக் கொள்கிறார். 

இந்த கலவையானது, வேகமாக மாறி வரும் உலகில் தகவல் தெரிவிப்பில் சுந்தர் பிச்சையின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.அத்துடன் அவரது இந்த பழக்கவழக்கம், தனிப்பட்ட விருப்பங்களை வெளிப்படுத்துவது மட்டுமின்றி, இன்றைய வேகமான சூழலில் சேகரிக்கப்பட்ட மற்றும் எளிதில் புரியும் வகையிலான தகவலின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தையும் வெளிப்படையாகக் காட்டுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News