பொது விநியோகத்திட்ட கீழ் -மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கான குறைதீர்வு முகாம்
பொது விநியோகத்திட்ட பயனாளிகளின் நலன்கருதி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பத்து வட்டங்களிலும் மின்னணு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை /நகல் குடும்ப அட்டை முதலியவை தொடர்பான குறைதீர்வு முகாம் 2024-ஜீலை-13-ந் தேதி அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
எனவே, இக்குறைதீர்வு முகாமில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply