25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அரைக்கீரை சூப்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அரைக்கீரை சூப்

தமிழ் மக்களுக்கு அறிமுகமான கீரை வகைகளில் அரைக்கீரை ஒன்று, அரைக்கீரையில் 87 சதவிகிதம் நீர் உள்ளது. 8 சதவிகிதம் புரதச்சத்து உள்ளது மற்றும் 0.4 சதவிகிதம் கொழுப்புச்சத்தும், 2.4 சதவிகிதம் தாது உப்புகளும் உள்ளன. 100 கிராம் கீரையில் 364 மி.கிராம் சுண்ணாம்புச் சத்தும், 38.5 கிராம் புரதச் சத்தும் உள்ளன.சித்த மருத்துவத்தில் இந்தக் கீரை முக்கியமான ஒரு மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. காய்ச்சல், ஜன்னி, கபரோகம், வாத நோய்கள் ஆகிய நோய்களைக் குணமாக்கும். தாது விருத்திக்கு இது சிறந்தது.

தேவையான பொருட்கள்-

அரைக்கீரை (பொடியாக நறுக்கியது) - 1 கைப்பிடியளவு

வெங்காயம் (பொடியாக நறுக்கியது) -1
 

கொத்தமல்லிப் பொடி - அரை தேக்கரண்டி
 

தக்காளிப்பழம் (பொடியாக நறுக்கியது) 2
 

எலுமிச்சம் பழச்சாறு - 2தேக்கரண்டி
 

மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப
 

பயத்தம் பருப்பு - 50கிராம்
 

வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
 

சீரகப்பொடி - அரை தேக்கரண்டி
 

பூண்டு 2 பற்கள், தண்ணீர் 500 மி. லி 

செய்முறை-

தண்ணீர் விட்டு பயத்தம்பருப்பைக் குழைய வேக வைத்து சூப் வடிகட்டியின் மூலம் வடிகட்டிக் கொள்ள வேண்டும் வெங்காயத்தையும் பூண்டும் நெய்விட்டு வதக்கிக் கொள்ள வேண்டும். அதில் சீரகப்பொடி, கொத்தமல்லிப் பொடி, பொடியாக நறுக்கிய தக்காளிப்பழம் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும் உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு எலுமிச்சம்பழச்சாற்றைச் சேர்க்க வேண்டும்.நன்கு வதக்கிய வெங்காயம். எலுமிச்சம் பழத்துண்டுகளோடு பரிமாறலாம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News