25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ப்ளூ ஆதார் கார்டு எப்படி பெறுவது?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ப்ளூ ஆதார் கார்டு எப்படி பெறுவது?

நீல நிற ஆதார் அட்டை என்பது பால ஆதார் அட்டை என்றும் அழைக்கப்படுகிறது, இது இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக குறிப்பாக வழங்கப்படும் ஆதார் அட்டை ஆகும். பெரியவர்களுக்கு வழங்கப்படும் வழக்கமான ஆதார் அட்டையிலிருந்து வேறுபடுத்திக் காட்ட இது நீல நிறத்தில் உள்ளது.பயோமெட்ரிக் தரவு (கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேன்) சேகரிக்கப்படும் வழக்கமான ஆதார் அட்டையைப் போலல்லாமல், நீல ஆதார் அட்டைக்கு குழந்தையிடமிருந்து எந்த பயோமெட்ரிக் தகவலும் தேவையில்லை.

ஏனெனில் சிறு குழந்தைகளிடமிருந்து பயோமெட்ரிக் தரவுகளை சேகரிப்பது சவாலானது மற்றும் நம்பமுடியாதது. அதற்குப் பதிலாக, குழந்தையின் UID (தனித்துவ அடையாள எண்) அவர்களின் மக்கள்தொகைத் தகவல் மற்றும் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் ஒருவரின் UID உடன் இணைக்கப்பட்ட முகப் புகைப்படத்தின் அடிப்படையில் இந்த கார்டு உருவாக்கப்படுகிறது. எப்படி விண்ணப்பிப்பது: இதற்கு எளிதாக விண்ணப்பிக்க முடியும். இணையத்திலேயே இதற்கான புக்கிங் செய்யலாம். அல்லது அதிலேயே பார்ம் டவுன் லோடு செய்து அதை நிரப்பி ஆதார் அலுவலகத்தில் கொடுக்கலாம். இல்லையென்றால் பதிவு மையத்தில், நீங்கள் ஆதார் பதிவுப் படிவத்தை நிரப்ப வேண்டும். யுஐடிஏஐ இணையதளத்தில் இருந்து படிவத்தை முன்கூட்டியே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்பின் குழந்தையின் UID (தனித்துவ அடையாள எண்) அவர்களின் பிறப்பு அடையாள விவரம், மக்கள்தொகைத் தகவல் மற்றும் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் ஒருவரின் UID உடன் இணைக்கப்பட்ட முகப் புகைப்படம் ஆகியவற்றை கொடுக்கலாம்.

அதன்பின் 5 வயது தாண்டியதும் ப்ளூ ஆதார் அட்டைக்கு பதிலாக சாதாரண ஆதார் அட்டையை பெற்றுக்கொள்ளலாம். இது போக ஆதாரிலேயே 4 வகையான ஆதார் உள்ளன. ஒன்று சாதாரண ஆதார்.
இது ஒரு லெட்டர் அடிப்படையிலான லேமினேட் செய்யப்பட்ட ஆதார் கடிதம் ஆகும். இதில் ஆதார் அட்டை கொடுக்கப்பட்ட வெளியிடப்பட்ட தேதி மற்றும் QR குறியீடு இருக்கும். புதிய பதிவு அல்லது பயோமெட்ரிக் மாற்றம், மொத்தமாக ஆதார் புதுப்பிப்பு செய்யப்பட்டால், புதிய ஆதார் அட்டை சாதாரண தபால் மூலம் மக்களுக்கு அனுப்பப்படும். ஆதார் கடிதத்தை அது வரை தாற்காலிகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். அதே சமயம் இந்த ஆதார் கடிதம் இருந்தால் மட்டுமே தபாலில் வரும் கார்டை வாங்க முடியும். eAadhaar: eAadhaar என்பது ஆதாரின் மின்னணு வடிவமாகும். இது UIDAI ஆல் டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்டது. இதில் பாதுகாப்பான QR குறியீடு இடம்பெற்று இருக்கும். அதேபோல் ஆன்லைனில் திறக்க கடவுச்சொல் கொடுக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் eAadhaar/masked eadhaar ஐ எளிதாக பதிவிறக்கம் செய்யலாம். அதற்கு ஓடிபி வரும். eAadhaar/masked eAadhaar பொதுவாக ஆதார் கார்டில் உள்ள கடைசி 4 இலக்கங்களை மட்டுமே காட்டும். ஆதார் பிவிசி கார்டு: ஆதார் பிவிசி கார்டு என்பது UIDAI ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதாரின் சமீபத்திய வடிவமாகும். எடுத்துச் செல்ல எளிதானது மற்றும் வலிமையானது. PVC-அடிப்படையிலான ஆதார் அட்டையானது டிஜிட்டல் முறை மூலம் கையொப்பமிடப்பட்ட ஆதார் ஆகும். இது டேம்பர் ப்ரூஃப் கொண்டது. அதேபோல் தண்ணீரில் விழுந்தாலும் வீணாகாது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News