25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஐ.சி.சி. தரவரிசையில் முன்னேற்றம்  ஸ்மிருதி மந்தனா NO - 4
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஐ.சி.சி. தரவரிசையில் முன்னேற்றம்  ஸ்மிருதி மந்தனா NO - 4

ஐ.சிசி. டி-20  பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 4-வது இடத்துக்கு முன்னேறினார்.சர்வதேச டி20 போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) துபாயில் வெளியிட்டது. பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய துவக்க வீராங்கனை ஸ்மிருதிமந்தனா 743 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருந்து நம்பர் 4 இடத்துக்கு முன்னேறினார். துணை கேப்டனான இவர் சமீபத்தில் முடிந்த ஆசிய கோப்பை பைனலில் 60 ரன் விளாசினார்.

பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப் பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாகூர், 722 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு முன்னேறினார். வேகத்தில் மிரட்டிய இவர், ஆசிய கோப்பையில் 7 விக்கெட் சாய்த்தார். தீப்தி சர்மா 755 புள்ளிகள் 3வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News