25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


கனடா போன்ற நாடுகளில் வாழும்இந்தியர்களின் சம்பளம்அதிகமாக  இருந்தாலும், பெருந்தொகைப்பராமரிப்பிலிருந்து தப்ப முடியாமல்அவதிப்படுகின்றனர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கனடா போன்ற நாடுகளில் வாழும்இந்தியர்களின் சம்பளம்அதிகமாக  இருந்தாலும், பெருந்தொகைப்பராமரிப்பிலிருந்து தப்ப முடியாமல்அவதிப்படுகின்றனர்

உலகம் முழுவதும் மக்கள் விலை உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவின் நெருக்கடியால் அவதிப்பட்டு வரும் இந்த நிலையில், கனடாவில்60 லட்சம் ரூபாய்(100,000 டொலர்) ஆண்டுச் சம்பளம் போதவில்லை என்று கூறிய இந்திய தொழில்நுட்ப நிபுணர் சமீபத்தில் வைரலாகியுள்ளார்.PiyushMonga என்ற பிரபலInstagram பக்கத்தில் நடந்த வீடியோ ஒன்றில், தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் பெண் ஒருவர், தனது ஆண்டு வருமானம்மற்றும் கனடாவில் வசிப்பதில்இருக்கும் சிக்கல் குறித்துபேசினார்.

பணியிடத்தின் வகையை பற்றி கேட்டபோது,அந்தப் பெண் ஒரு வங்கி நிறுவனத்தில்TestLeadஆகபணியாற்றுவதாகவும், தனது10 ஆண்டு அனுபவத்தை கொண்டு ஆண்டுக்கு$100,000(ரூ.60 லட்சம்) வரையிலான சம்பளம் பெறுவதாகவும் கூறினார்.ஆனால் இது தற்போதைய பொருளாதார சூழலில் ,போதுமானது அல்ல என்றும், இங்கு வாழ்க்கை செலவுகள் மிகவும் அதிகம் என்றும் அவர் கூறினார்.

கனடாவின் ரொறன்ரோநகரத்தில் வசிக்கும் அப்பெண்,"இந்தியாவில்வாழ்க்கைச் செலவுகள் இவ்வளவுமோசமாக உணரப்படுவதில்லை" என்றும், பண்ணீர்கூட இருமடங்காக உயர்ந்ததாககுறிப்பிட்டார்.தான் வசிக்கும் அறைக்கு மாதம் 1600 டொலர் (சுமார் ரூ.1 லட்சம்) வாடகை செலுத்துவதாக கூறினார்.இது கனடாவில் வாழ அவருக்கு அதிகபட்சம் பணம் செலவிட வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பானInstagram பயனர்களின்கருத்துக்கள் வெவ்வேறு விதமாகவும், அவருடையகருத்துக்களை சிலர் ஏற்காமல்கடுமையாக எதிர்த்தாலும், சிலர் அவருக்குஒப்புதல் அளித்துள்ளனர்.இந்த நிகழ்வுகனடா போன்ற நாடுகளில்வாழும் இந்தியர்களின் நிஜ வாழ்க்கையைஉணர்த்துகிறது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News