25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஐ.பி.எல். தொடரின் 18 வது சீசன் வரும் ஏப்ரல், மே மாதம் நடக்கவுள்ள வீரர்களுக்கு  வீரர்கள் ஒப்பந்த தொகை தவிர ,ஒவ்வொரு போட்டிக்கும் சம்பளம் ரூ.7.5 லட்சம் தரப்படும்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஐ.பி.எல். தொடரின் 18 வது சீசன் வரும் ஏப்ரல், மே மாதம் நடக்கவுள்ள வீரர்களுக்கு  வீரர்கள் ஒப்பந்த தொகை தவிர ,ஒவ்வொரு போட்டிக்கும் சம்பளம் ரூ.7.5 லட்சம் தரப்படும்

ஐ.பி.எல். தொடரின் 18 வது சீசன் வரும் ஏப்ரல், மே மாதம் நடக்கவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடக்கவுள்ளது. இதற்க முன்னதாக ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைக்கலாம். விடுவிக்கப்பட்ட வீரர்களை மீண்டும் ஏலத்தில் எடுப்பது குறித்து முடிவெடுக்க, ஐ.பி.எல் கட்டுப்பாட்டுக்குழு கூட்டம் நேற்று நடந்தது.

இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. ஏலத்தொகை ரூ.120 கோடியாக அதிகரிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டினை விட ரூ.20 கோடி அதிகம் தவிர அணிகள் தலா 6 வீரர்களை தக்கவைக்கலாம். விடுவிக்கப்பட்ட வீரரை மீண்டும் வாஙகிக் கொள்ளம் வகையிலான 'ரைட் டு மேட்சி முறை நீடிக்க உள்ளது. எனினும் இதுகுறித்து இறதி அறிவிப்பு வெளியாகவில்லை.

பி.சி.சி.ஐ. செயலர் ஜெய் ஷா வெளியிட்ட செய்தியில் முதன்முறையாக ஐ.பி.எல். போட்டி சம்பளம் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்படி ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.7.5 லட்சம் தரப்படும். ஒரு சீசன் முழுவதும் களமிறங்கும் வீரருக்கு ரூ.1.05 கோடி கிடைக்கும், இதற்காக ஒவ்வொரு அணியும் ரூ.12.60 கோடி ஒதுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனால் வீரர்கள் ஒப்பந்த தொகை தவிர ஒரு போட்டியில் களமிறங்கினால், தனியா ரூ.7.5 லட்சம் சம்பளம் பெறவுள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News