25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இஸ்ரோ விண் விஞ்ஞானி வளர்மதி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இஸ்ரோ விண் விஞ்ஞானி வளர்மதி

விஞ்ஞானி வளர்மதி அவர்கள் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரியலூர் நிர்மலா மேல்நிலைப்பள்ளியில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர் கல்லூரிப் படிப்பினை அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் பயின்றார். பிறகு கோயமுத்தூரில் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னியியல் பொறியியல் படிப்பையும் சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் மின்னனுவியல் மற்றும் தொடர்பியலில் எம் இ படிப்பினையும் கற்றுத் தேர்ந்தார் . DRDO மற்றும் இஸ்ரோ ஆகிய இரண்டிலும் வாய்ப்புக்கள் வந்தபோது இஸ்ரோவைத் தேர்ந்தெடுத்தார்.  முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவாக தமிழக சார்பில் வழங்கப்படும் அப்துல் கலாம் விருதினைப் பெற்ற முதல் நபர் இவர்தான்.1984 ஆம் ஆண்டு இஸ்ரோவில் இணைந்தார் 2012 ஆம் ஆண்டு ரேடார் இமேஜ் சாட்டிலைட் - 1ன் திட்ட இயக்குநராக பணியாற்றினார் 2017-ல் இந்து தமிழின் தமிழ் திரு விருதும் பெற்றுள்ளார். 

 

சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவிய நிகழ்வு முதல் பல பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவிய நிகழ்வு வரை கடந்த ஆறு வருடமாக மிஷன் ரேஞ்ச் ஸ்பிக்கராக வளர்மதி பணியாற்றியிருக்கிறார் 2012-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட RISAT-1 திட்ட இயக்குநராகவும் செயல்பட்டு இருக்கிறார் தனது கம்பீரமான குரலுக்காக பலராலும் பாராட்டப்பட்டவர் சந்திரயான் 3 விண்கலம் ஏவப்பட்டு நிலவின் தென்பகுதியில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக இறங்கி வரலாற்று சாதனைப் படைத்தது அதற்கும் கவுண்டவுன் கொடுத்தவர் வளர்மதி அவர்கள்தான். உடல் நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வளர்மதி,மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் .இவரது இழப்பு இந்திய விண்வெளித்துறைக்கும், தமிழகத்திற்கும் மிகப்பெரிய இழப்பாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News