பருப்பு நிறம் மாறவோ, பூஞ்சை பிடிக்காவோ செய்யாது
வறுத்த புழுங்கல் அரிசியை மாவாக்கி வைத்துக் கொண்டால்,கூட்டுக்கறிகள் இறக்கும் போது லேசாகத் தூவிவிட்டால், வாசனை கூடுதலாக இருக்கும்.
அரிசியில் உள்ள புழுக்களை போக்க அரிசியை காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து,அதில் சில பிரியாணிஇலைகளை போடவும்,
பிளாஸ்டிக் வடிகட்டியை கூட இனி தூக்கிப் போடாமல் பயன் படுத்தலாம். இப்போது எல்லார் வீட்டிலும் இஞ்சி பூண்டு நசுக்க உரல் இருக்க தான் செய்கிறது. உரலின் கைப்பிடி அளவிற்கு வடிகட்டியில் சின்னதாக ஒரு ஓட்டை போட்டு அந்த உரலின்மேல் வைத்து ,புடியை அந்த ஓட்டையில் சொருகி வைத்து விட்டால், இஞ்சி பூண்டு என எதை நசுக்கினாலும் அதிலிருந்து எதுவும் வெளியில் தெறித்து வராது. மற்ற நேரங்களில் பூச்சி எதுவும் அதில் போய் அமராமலும் இருக்கும்.
பருப்பை சேகரித்து வைத்திருக்கும் பாத்திரத்தில் நாலைந்து காய்ந்த மிளகாயைப் போட்டு வையுங்கள். பருப்பு நிறம் மாறவோ, பூஞ்சை பிடிக்காவோ செய்யாது
அடுப்பு, சமையல் மேடை, அடுப்பின் பின்புறம் என எல்லா இடங்களிலும் எண்ணெய் பிசுக்கு ஒட்டி இருந்தால், டைல்ஸை சாதாரண துணியால் துடைத்த பின் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சலவைச் சோடாவைக் கலந்து பிசுக்கு பிடித்த இடங்களில் பூசிவிட்டு, உலர்ந்த துணியால் துடைத்தால் பளிச்சென்று மின்னும்.
0
Leave a Reply