25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


.பலாக்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

.பலாக்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள்

 பலாப்பழத்தில் மருத்துவ குணங்கள் அதிகம் உண்டு. இதில் இருக்கும் ஏராளமான சத்துக்கள் நோய்க்கிருமிகளை அழித்து ,நோய் எதிர்ப்பு சக்தியையும் தருகிறது. முக்கியமாக, இதில் உள்ள வைட்டமின் சி மிகச் சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டாக செயலாற்றி உடல் நலனைக் காக்கிறது. பலாப்பழம் பழுக்காமல் காயாக இருக்கும்போதும் அதில் நிறைந்த சத்துக்கள் உள்ளன என்பதை நிறைய பேர் அறிந்திருக்க மாட்டார்கள்.பலாக்கொட்டையில் உள்ள மாவுச்சத்து பலாக்கொட்டைக்கு மிகுந்த சுவையை தருவதோடு, அதை கூட்டு, பொரியல் என செய்து உணவாகவும் உபயோகிக்க உதவுகிறது. பலாக்கொட்டையை சிறிது உப்பு போட்டு வேகவைத்து தோலுரித்து  அப்படியே சுவைத்தாலும் ருசியாக இருக்கும். லேசான துவர்ப்புடன் இருக்கும் பலா பிஞ்சும் ஏராளமான மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கேன்சர் போன்ற நோய்களை எதிர்த்துப் போராடும் தன்மையைக் கொண்டிருக்கிறது. இதில் வைட்டமின் ஏ, பி, சி, இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம், புரதம், உயர்தரமான மாவுச்சத்து, நார்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளன.  நமது உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியைத் தருகிறது.

பலாக்காய் உண்ணும் இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது.  உடல் உஷ்ணத்தை தணித்து பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி போன்றவற்றை குணமாக்குவதில் சிறப்பாக செயல்படுகிறது. பலாக்காய் உடலுக்கு ஊட்டச்சத்து தருவதாக அமைகிறது.பலாக்காயில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மலச்சிக்கலையும் குணப்படுத்துகிறது. மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் பலாப்பழத்தை சாப்பிட்டு அதன் காய்களையும் உணவில் சேர்த்து மலச்சிக்கலை தவிர்க்கலாம். ஆனால், பலருக்கும் பலாக்காய் செரிமானம் ஆகாமல் இருக்கும் பிரச்னை உண்டு. எளிதில் செரிமானம் ஆக அதனுடன் இஞ்சி, மிளகு, சீரகம் போன்றவற்றை சேர்த்து சமைத்து சாப்பிட வேண்டும்.பலாக்காயின் தித்திப்பான சுவை சர்க்கரை நோயை அதிகரிக்கும் என்ற தவறான தகவல் உள்ளது. இதில் உள்ள அதிகப்படியான மாவு சத்து மற்றும் நார்ச்சத்தினால் நம் உடலில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது என்பதுதான் உண்மை. மேற்கத்திய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் பலாக்காய் உணவுகளை சாப்பிட்ட அரை மணி நேரத்தில் நமது உடலில் உள்ள சர்க்கரை அளவு வேகமாக குறைகிறது என மருத்துவ ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர்.

இதில் உள்ள காப்பர் சத்து தைராய்டு ஹார்மோன் பிரச்னைகளை தடுப்பதிலும் வைட்டமின் b6 இரத்தத்தில் உள்ள ஹோமோ சிஸ்டின் அளவை குறைத்து இதய பாதிப்புகளை குணப்படுத்துகிறது. இதில் உள்ள இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் சி சத்துக்கள் புது இரத்த செல்களை உருவாக்குவதோடு, இரத்த சோகை பிரச்னைகளையும் சரிசெய்கிறது என்கின்றனர்.இந்த பலாக்காய் அரிசிக்கு நிகரான மாவுச்சத்தை கொண்டுள்ளதால் இலங்கையில் இந்தப் பலாக்காய் உணவுகளை ஊட்டச்சத்து வேண்டி அதிகமாக பயன்படுத்துகின்றனர். கேரளத்தில் இதில் உள்ள சத்துகளை அறிந்து இந்த பலாக்காய் உணவுகளை கிட்டத்தட்ட பல ஆயிரம் வருடங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர்.பலாக்காயை அதிக அளவில் உண்பதால் செரிமான பிரச்னை, வயிற்று வலி போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு அதனால் ஒவ்வாமையும் ஏற்படும் என்பதால் அவரவர் உடல் நலனை கருத்தில் கொண்டு இதை எடுத்துக் கொள்வது நல்லது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News