இயற்கையின் தங்கபஸ்பம் செம்பருத்தி பூ, இலைகள்
ரத்த கொலஸ்ட்ரால் இருப்பவர்களுக்கு செம்பருத்தி பூக்கள் ,22% வரை கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.. நோய் எதிர்ப்பு சக்தியும் பெருகும்.கெட்ட கொழுப்பை இந்த செம்பருத்தி இலைகள் குறைக்கின்றன., தமனிகளின் உள்ளே, அடைப்புகளை நீக்குவதன் மூலம், கொழுப்பின் அளவை இவைகள் குறைக்கின்றன. அதேபோல, செம்பருத்தி இலையில் வைட்டமின்C நிரம்பி உள்ளதால்,இருமல்,ஜலதோஷம்போன்றபிரச்சனைகளுக்கும்நிவாரணம்கிடைக்கிறது.வெறுமனே இந்த பூக்களின் இதழ்களை மென்று சாப்பிடலாம். அல்லது இதழ்களை கழுவி, ஜூஸ் தயாரித்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இதய நோய்கள் நெருங்காது..இதயத்தில் தொந்தரவு இருந்தாலும் குணமாகும்.. டீ போலவும் தயாரித்து குடிக்கலாம்.. அல்லது செம்பருத்தி பூக்களை காய வைத்து பவுடர் செய்தும் சாப்பிடலாம்.
உதிரப்போக்கு அதிகமாக இருக்கும்போது,செம்பருத்தி இதழ்களை நெய்யில் வதக்கி சாப்பிடலாம்..அல்லது செம்பருத்தி பூக்களை விழுதாக அரைத்து,வெறும் வயிற்றில்,7 நாளைக்கு சாப்பிட்டாலும் மாதவிடாய் பிரச்சனை சீராகும்.. அல்லது இந்த பூக்களை நிழலில் உலர்த்தி, பவுடர் செய்து, காலையிலும், மாலையிலும் 7 நாட்கள் சாப்பிட்டாலும் உதிரப்போக்கு பிரச்சனை சீராகும்.
,புற்றுநோயால் ஏற்பட்ட புண்களை ஆற்ற, இந்த இலைகளை அரைத்து பற்றுபோல பூசுவார்கள்..வயிறு, சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி குடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. அதனால்தான், இன்றுவரை ஆயுர்வேத மருத்துவத்தில் செம்பருத்தி இலைகள் மிக முக்கியத்தை பெற்று வருகின்றன.
செம்பருத்தி இலைகளை அல்லது பூக்களை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பதால், உஷ்ணம் விலகும்.கண் எரிச்சல், கண் நோய்கள், கண் வீக்கம், கண்களில் நீர் வடிதல்,கண்களில் கட்டி போன்ற சூட்டை கிளப்பக்கூடிய பிரச்சனைகளுக்கு இந்த தண்ணீர் அருமருந்தாகும்.. சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு போன்ற பிரச்சனை இருந்தாலும், நீங்கிவிடும்.
உடலிலுள்ள கழிவுகளும் வெளியேறிவிடும்..ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த செம்பருத்தி பூக்கள் மிகவும் நல்லது. அதனால்,இதில் டீ தயாரித்து குடிக்கலாம். அல்லது வெறும் பூவின் இதழ்களை நீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்..அல்லது செம்பருத்தி பூக்களை பொடி செய்து வைத்து கொண்டு,சூப் போலவும் குடித்து வரலாம். இதனால் பித்தமும் நீங்கும்.தலைமுடி வறட்சியை போக்கும் செம்பருத்தி இலைகள்.
0
Leave a Reply